| 5750. | சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன் முந்தி எழுந்துமுனிந்தமை நோக்கி, ‘வெந் திறலாய்! விரைவின் வருக !’ என்றான்; ‘இந்திரசித்துஇவன்’ என்பது இசைத்தான்.* |
சிந்தைஉவந்தவன் ஆகி - (அனுமன்) மனமகிழ்ச்சிஅடைந்து; அரக்கன் முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி - இந்திர சித்து முற்படச் சீறிப் புறப்பட்டதைப் பார்த்து; ‘வெந்திறலாய்- கொடிய வலிமை உடைய இந்திரசித்தே !; விரைவின் வருக’ - சடுதியில் போர்க்கு வருக; என்றான் - என்று அழைத்தான்; இவன் இந்திரசித்து என்பது இசைத்தான் - இவன் இந்திரசித்து என்பதனை (ஒருவன்) எடுத்துக் கூறினான். முன்பாட்டுடன்இப்பாட்டு அந்தாதித் தொடைபோல் அமைந்தது காண்க. (34) | 5751. | என்று அவன்மாற்றம் இயம்புதல் கேட்டு, குன்றம் எனும் புயவானர வீரன், ‘நன்று இது !நன்று இது ! என்ன நயந்தான்; சென்று அணைவுற்றதுஅரக்கன சேனை;* |
என்று அவன்மாற்றம் இயம்புதல் கேட்டு - ஒருவன் ‘இவன் இந்திரசித்து’ என்று சொல்லியதைக் கேட்டு; குன்றம் எனும் புய வானர வீரன் - மலை போன்ற தோள் உடைய அனுமன்; ‘நன்று இது ! நன்று இது ! என்ன நயந்தான் - நல்லது நல்லது என்றுரைத்துப்போரை விரும்பினான் (இந்நிலையில்); அரக்கனசேனை - இந்திர சித்துவின் சேனை; சென்று அணைவுற்றது - (அனுமன்இருந்த தோரண வாயிலைச்) சென்று சேர்ந்தது. அவன் என்பது‘இவன் இந்திர சித்து’ என்று கூறிய அரக்கனைச் சுட்டியதாகக் கொள்ளப் பொருள் நேரிதாகும். (35) | 5752. | ஊழி எழுந்துஉலகத்தை ஒடுக்க, ஆழ் இயல் தானைஅரக்கர் அடங்க, ஏழ் உலகும் இடம்இல்லை எனும்படி ஆழி கிளர்ந்தனஎன்ன அழைத்தான்.* |
ஆழ் இயல் தானைஅரக்கர் அடங்க - ஆழும் இயல்பினை உடைய சேனையாகிய அரக்கர் முழுவதும்; ஏழ் உலகும் இடம் |