பக்கம் எண் :

680சுந்தர காண்டம்

தாம் தாம்கைதேர்ந்துள்ள ஆயுதங்களைக் கொண்டு, தம்மவர்களைக்
காப்பவரும்; எண்ணல்ஆம் - நினைத்தற்கும் இயலாத; தகைமை இல்லார் -
பெருமையுடையவருமாகி; இறந்து - அனுமனால் உயிர்நீத்து; இடை கிடந்தார்
தம்மை -
அவ்விடத்திலே விழுந்து கிடந்த அரக்க வீரர்களை; மண்ணுளே
நோக்கி நின்று -
போர்க்களத்திலே பார்த்து நின்று; வாய் மடித்து உருத்து
-
உதட்டை மடித்துக் கடித்துக் கொண்டு கோபித்து; மாயாபுண்ணுளே கோல்
இட்டு அன்ன -
ஆறாத புண்ணிலே கோலைக் கொண்டு குத்தினாற் போல;
மானத்தால் புழுங்குகின்றான் -
அவமானத்தால் (இந்திரசித்து) (உடலும்
உள்ளமும்) கொதிக்கின்றவனானான்.

     பல சிறப்பிற்குஉரிய வீரர்கள் போர்க்களத்தில் இறந்து கிடந்ததைப்
பார்த்தபோது, இந்திரசித்தன் மனம் மிகவும் வருந்தியது. அவ்வருத்தம்
புண்ணில் கோல் நுழைந்தால் போன்று ஆயிற்று என்பதாம்.          (43)

5760.

‘கானிடைஅத்தைக்கு உற்ற குற்றமும், கரனார்
                                பாடும்,
யானுடை எம்பிவீந்த இடுக்கணும், பிறவும் எல்லாம்,
மானிடர்இருவராலும், வானரம் ஒன்றினாலும்,
ஆனிடத்து உள;என் வீரம் அழகிற்றே அம்ம !’
                               என்றான்.

     கானிடைஅத்தைக்கு உற்ற குற்றமும் - தண்டக வனத்திடத்துஎன்
அத்தையாகிய சூர்ப்பணகைக்கு நேர்ந்த மூக்கு முதலியன அறுப்புண்ட
குறைபாடும்; கரனார் பாடும் - கரன் இறந்ததும்; யானுடை எம்பி வீந்த
இடுக்கணும் -
என்னுடைய தம்பி அக்க குமாரன் அழிந்த துன்பமும்; பிறவும்
எல்லாம் -
மற்றைய (அசோகவனம் அழிந்தமை முதலியனவுமான) யாவும்;
மானிடர் இருவராலும் - இரண்டு மனிதர்களாலும்; வானாம் ஒன்றினாலும் -
ஒரு குரங்கினாலும்; ஆனிடத்து - உண்டாயின என்றால்; என் உளவீரம் -
என்னிடத்து உள்ள வீரம்; அழகிற்றே - அழகுடையதே !; அம்ம ! என்
றான்-
என்ன ஆச்சரியம் என்று (இந்திரசித்து) கூறினான்.

     
‘இவ்வளவு துன்பமும், இருமானிடர்களாலும், ஒரு குரங்கினாலும்
நேர்ந்தது என்றால், என் வீரம் அழகிற்றே’ என்று இகழ்ச்சிக் குறிப்புடன்
பேசினான் இந்திரசித்து.