பக்கம் எண் :

682சுந்தர காண்டம்

     தாருகன் குருதிஅன்ன குருதியில் - தாருகாசுரனுடைய இரத்தப்
பெருக்குப் போன்ற இரத்தப் பெருக்கில்; தனிமாசீயம் கூர் உகிர் கிளைத்த
-
ஒப்பற்ற நரசிங்கமூர்த்தி, தனது கூரிய நகங்களால் கிளறிப் பிளந்த;
கொற்றகனகன் மெய்குழம்பின் தோன்ற - வெற்றியை உடைய இரணியனது
உடல் குழம்பாகக் கலக்கப்பட்டுக் கிடந்ததுபோல் உருத் தெரியாமல் (தன்
தம்பியின் உடல்) கிடந்து விளங்க (அதனைக் கண்டு); தேர் உக - தான் ஏறி
வந்த தேரும் நிலை குலைய; கையின் வீர சிலை  உக - தன் கையில்
பிடித்திருந்த வீரத் தன்மையிற் சிறந்த வில்லும் நழுவ; வயிரம் செங்கண் நீர்
உக குருதி சிந்த -
பகைமையைக் காட்டும் தனது சிவந்த கண்கள் நீரையும்
இரத்தத்தையும் சிந்த; நெருப்பு உக உயிர்த்து நின்றான் - நெருப்பையும்
கக்க (இந்திரசித்து) பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றான்.

     அக்க குமாரன்உடல் விழுந்து கிடந்த இடத்தின் இரத்தப் பெருக்குக்கு,
தாருகன் இரத்தமும், அது உருத்தெரியாமல் சிதைந்து கிடந்ததற்கு, இரணியன்
உடலும் உவமைகள். அவ்வுடலைக் கண்ட இந்திரசித்து உயிர்த்து நின்றான்
என்பதாம்.

     தாருகன்: ஓர்அசுரன்: காளிதேவியால் அழிக்கப்பட்டவன்; ‘தாருகன்
பேருரம் கிழித்த பெண்ணும் அல்லள்’ (சிலப். 20: 39-40)            (46)

5763.

‘வெவ் இலைஅயில் வேல் உந்தை வெம்மையைக்
                         கருதி நோக்கி,
வவ்வுதல் கூற்றும்ஆற்றான்; மாறு மாறு உலகின்
                         வாழ்வார்,
அவ் உலகத்துஉளாரும், அஞ்சுவர் ஒளிக்க; ஐயா !
எவ் உலகத்தைஉற்றாய், எம்மை நீத்து, எளிதின் ?
                         எந்தாய் !’

     எந்தாய் -எனது ஐயனே!; வெவ்இலை அயில் வேல் உந்தை -
கொடியதும் இலை போன்ற முனையுடையதும் கூர்மை உடையதும் ஆன
வேலாயுதத்தை ஏந்திய உனது தந்தையின் (இராவணனது); வெம்மையை கருதி
நோக்கி -
கோபத்தை ஆலோசித்துப் பார்த்து; கூற்றும் வவ்வுதல் ஆற்
றான்-
யமனும் (உனது உயிரைக்) கவரவல்லனல்லன்; மாறுமாறு
உலகின்வாழ்வார் -
மற்றும் வெவ்வேறு உலகங்களில் வாழ்பவரான; அவ்
உலகத்துஉளாரும் ஒளிக்க அஞ்சுவர் -
அந்தந்த உலகத்தில்
உள்ளவர்களும்