பக்கம் எண் :

பாசப் படலம்685

ஒன்றே அடையக்கூடியதாகும்; இன்றே சமையும் - (அவ்விரண்டில் ஒன்று)
இன்றைக்கே அமையும்; இவன் இந்திரசித்து என்பான் - இவன் இந்திரசித்து
என்பவனே ஆவான்.

     இந்திரசித்தின்வீரத்தைப் பற்றிக் கேள்வியுற்றதனாலும், பிராட்டியை
இலங்கையில் தேடியபோது இவனை மாளிகையில் கண்டதனாலும், வருபவன்
இந்திரசித்தே என்று அனுமன் தெளிந்தான்.                      (50)

5767.

‘கட்டு ஏறு,நறுங் கமழ் கண்ணி, இக் காளை என்
                           கைப்
பட்டால், அதுவேஅவ் இராவணன் பாடும் ஆகும்;
“கெட்டேம்” எனஎண்ணி, அக் கேடு அருங்
                          கற்பினாளை
விட்டு ஏகும்; அதுஅன்றி, அரக்கரும் வெம்மை
                          தீர்வார்.

     நறுங் கமழ்கண்ணி - மிக்க மணம் வீசுகின்ற மாலையை அணிந்த;
இக்கட்டேறு காளை - இந்த வீர வெறிகொண்ட காளை போல்வான்; என்
கைப்பட்டால் -
என் கையால் இறந்தால்; அதுவே அவ் இராவணன் பாடும்
ஆகும் -
அச்செயலே அந்த இராவணன் அழிவாகவும் முடியும்; ‘கெட்டேம்’
என எண்ணி -
(ஆகவே இராவணன்) இனி நாம் தவறாமல் அழிவோம்
என்று நினைத்து; அக்கேடு அருங் கற்பினாளை விட்டு ஏகும் - அந்தக்
கெடுதல் இல்லாத கற்பினளான சீதா பிராட்டியை (இராமபிரானிடம்) கொண்டு
வந்து விட்டுச் செல்வான்; அது அன்றி - அதுவும் அல்லாமல்; அரக்கரும்
வெம்மை தீர்வார் -
அரக்கர்களும் தமது செருக்கு அடங்கிக் கொடுமை
ஒழிவார்கள்.

     இந்திரசித்துஅழிந்தால் இராவணன் அழிவான். இராவணன் வலிமைக்கு
இந்திரசித்தே மூலமாவான் என்பது அனுமன் கருத்து.                (51)

5768.

‘ஒன்றோ இதனால் வரும் ஊதியம் ?
                        ஒண்மையானைக்
கொன்றேன்எனின், இந்திரனும் துயர்க் கோளும்
                        நீங்கும்;