பக்கம் எண் :

686சுந்தர காண்டம்

 

இன்றே, கடிகெட்டது, அரக்கர் இலங்கை; யானே
வென்றேன், அவ்இராவணன்தன்னையும், வேரொடு’
                           என்றான்.

     ஒண்மையானை -ஒளியுற்றஇந்த இந்திரசித்தை; கொன்றேன் எனின்
-
நான் கொன்றேன் என்றால்; இதனால் வரும் ஊதியம் ஒன்றோ - இந்தச்
செயலால் விளையக்கூடிய நன்மை ஒன்று தானோ !; இந்திரனும் துயர்
கோளும் நீங்கும் அரக்கர் இலங்கை இன்றே கடி கெட்டது -
இந்திரனும்
துயர் கொண்டிருத்தலை நீங்கும் அரக்கர்களுடைய இலங்கை நகரம் இன்றே
காவல் ஒழிந்ததாம்; அவ் இராவணன் தன்னையும் வேரொடு யானே
வென்றேன் -
அந்த இராவணனையும் வேரோடு நானேவென்றவனாவேன்;
என்றான் - என்று (அனுமன்) எண்ணினான்.

     இந்திரசித்தின்அழிவினால் ஏற்படும் நன்மைகளை அனுமன்
எண்ணினான் என்பதாம். ஒண்மை - ஒளி; ஒளி - தான் உளனாய காலத்து
மிக்குத் தோன்றுதலுடைமை.                                 (52)

அரக்கர் படையுடன்அனுமன் பொருதல்

5769.

அக் காலை,அரக்கரும், யானையும், தேரும், மாவும்,
முக் கால் உலகம்ஒரு மூன்றையும் வென்று முற்றிப்
புக்கானின் முன்புக்கு, உயர் பூசல் பெருக்கும்
                                   வேலை,
மிக்கானும்,வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு
                                   மிக்கான்.

     அக்காலை -இவ்வாறுஅனுமான் எண்ணிக் கொண்டு நின்றபொழுது;
உலகம் ஒரு மூன்றையும் முக்கால் வென்று - மூன்று உலகங்களையும்
(ஒருமுறைக்கு) மூன்று முறையாக வென்று; முற்றி புக்கானின் முன்புக்கு -
எதிரில்லாமல் முடித்து இலங்கையில் வெற்றி வீரனாய்ப் புகுந்த இந்திரசித்துக்கு
முன்னே வந்து; அரக்கரும், யானையும் தேரும், மாவும் - அரக்கர்களாகிய
காலாட்படையும், யானை, தேர், குதிரை ஆகிய படைகளும்; உயர் பூசல்
பெருக்கும் வேலை -
மிக்க ஆரவாரத்தைப் பெரிதும் உண்டாக்கிய
வேளையில்; மிக்கானும் - பெரியோனான அனுமனும்; வெகுண்டு ஓர்
மராமரம் கொண்டு -
சினம் கொண்டு,