ஒரு ஆச்சாமரத்தைப்பிடுங்கி எடுத்துக் கொண்டு; மிக்கான் - (போர் செய்ய) பேருருக் கொண்டவனானான். இந்திரசித்துபோர்க்களம் புகுதற்கு முன்பு, நால்வகைப் படைகளும் வந்து ஆரவாரம் செய்தன. அதனைக் கண்டு அனுமனும் வெகுண்டு போருக்குத் தயாரானான் என்க. (53) | 5770. | உதையுண்டனயானை; உருண்டன யானை; ஒன்றோ ? மிதியுண்டனயானை; விழுந்தன யானை; மேல் மேல், புதையுண்டன யானை;புரண்டன யானை; போரால் வதையுண்டன யானை;மறிந்தன யானை, மண்மேல். |
யானை உதை உண்டன- (அரக்கர் சேனையில்) சில யானைகள் அனுமனால் உதைக்கப் பெற்றன; யானை உருண்டன - சில யானைகள் உருளப் பெற்றன; ஒன்றோ யானை மிதி உண்டன - இது மாத்திரமோ ? சிலயானைகள் அனுமனால் மிதிக்கப்பட்டுப் போயின; யானை விழுந்தன - சிலயானைகள் கீழே விழுந்தன; யானை மேல் மேல் புதை உண்டன - சில யானைகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் புதைந்து போயின; யானை புரண்டன - சில யானைகள் முன் பின்னாகவும் கீழ் மேலாகவும் நிலை மாறின; யானை போரால் வதையுண்டன - சில யானைகள் போரில் வதைக்கப்பட்டன; யானை மண்மேல் மறிந்தன - மற்றும் சில யானைகள் அந்தப் போர்க்களத்தில் மல்லாந்து வீழ்ந்தன. அனுமனால்யானைப்படை அழிந்தமை கூறப்பட்டது. (54) | 5771. | முடிந்ததேர்க் குலம்; முறிந்தன தேர்க் குலம்; முரண் இற்று இடிந்த தேர்க்குலம்; இற்றன தேர்க் குலம்; அச்சு இற்று ஒடிந்த தேர்க்குலம்; உக்கன தேர்க் குலம்; நெக்குப் படிந்த தேர்க்குலம்; பறிந்தன தேர்க் குலம், படியில். |
தேர்க்குலம்முடிந்த - சில தேர்க்கூட்டங்கள் முழுவதும் அழிந்தன; தேர்க்குலம் முறிந்தன - சில தேர்க் கூட்டங்கள் சிற்சில பகுதிகள் முறி்பட்டன; தேர்க்குலம் முரண் இற்று இடிந்த - சில தேர்க்கூட்டங்கள் வலிமை அழிந்து இடிபட்டன; தேர்க்குலம் இற்றன - சில தேர்க்கூட்டங்கள் மூட்டுக்கள் அற்று விழுந்தன; |