பக்கம் எண் :

688சுந்தர காண்டம்

தேர்க்குலம் அச்சுஇற்று ஒடிந்த - சில தேர்க்கூட்டங்கள்அச்சு முறிந்து
ஒடியப் பெற்றன; தேர்க்குலம் உக்கன - சில தேர்க் கூட்டங்கள் பொடியாய்
உதிர்ந்தன; தேர்க்குலம் நெக்கு படிந்த - சில தேர்க்கூட்டங்கள் சிதைந்து
கீழே விழுந்தன; தேர்க்குலம் படியில் பறிந்தன - சில தேர்க்கூட்டங்கள்
தரையில் சாய்ந்தன.

     இந்திரசித்தின்தேர்ப்படைகள் பலவாறு அழிந்தமை கூறப்பட்டது. (55)

5772.

சிரன்நெரிந்தவும், கண் மணி சிதைந்தவும், செறி
                           தாள்
தரன்நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார்
                           பூண்
உரன்நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒளிர்
                           பொற்
குரன்நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும்-
                           குதிரை.

     குதிரை சிரம்நெரிந்தவும் - (அனுமனால்அழிக்கப்பட்டு) குதிரைகள்
தலை நொறுங்கிப் போயவையும்; கண்மணி சிதைந்தவும் - கண்களின்
கருவிழிகள் சிதையப் பெற்றவையும்; செறிதாள்தரன் நெரிந்தவும் - வலிமை
மிக்க கால்களின் தொகுதி நொறுங்கப் பெற்றவையும்; முதுகு இற சாய்ந்தவும்
-
முதுகு ஒடியக் கீழே சாய்ந்தவையும்; தார் பூண் உரன் நெரிந்தவும் -
கிண்கிணி மாலை அணிந்த மார்பு நொறுங்கப் பெற்றவையும்; உதிரங்கள்
உமிழ்ந்தவும் -
இரத்தப் பெருக்குகளைக் கக்கியவையும்; ஒளிர் பொன்
குரன்நெரிந்தவும் -
பிரகாசமான பொற் சதங்கையை அணிந்த கால்
குளம்புகள்நொறுங்கப் பெற்றவையும்; கொடும் கழுத்து ஒடிந்தவும் -
வளைந்தகழுத்துக்கள் ஒடிந்தவையும் (ஆயின).

     குதிரைப் படைஅழிந்தமை கூறப்பட்டது.                    (56)

5773.

பிடியுண்டார்களும், பிளத்தலுண்டார்களும், பெருந்
                          தோள்
ஒடியுண்டார்களும்,தலை உடைந்தார்களும், உருவக்
கடியுண்டார்களும்,கழுத்து இழந்தார்களும், கரத்தால்
அடியுண்டார்களும்,அச்சமுண்டார்களும்-அரக்கர்.