மிகை எழும்சினத்து அனுமன் மேல் - பொங்கி எழும் கோபத்தை உடைய அனுமன்மீது; இந்திர சித்து விட்டன - இந்திர சித்து (தூரத்திலிருந்துதொடுத்து) விட்டவையாகிய; சிகை எழும் சுடர் வாளிகள் - கொழுந்துவிட்டுஎரியும் அம்புகள்; வெந்து புகை எழுந்தன - வெந்து புகை கிளம்பப்பெற்றவையும்; எரிந்தன கரிந்தன - எரியப்பட்டொழிந்தவையும், தீய்ந்துபோனவையுமாய்; போத - (அவன் உடலைச் சிறிதும்) ஊறுபடுத்தாதொழிய;நகை எழுந்தன - (அது கண்ட இந்திரசித்துக்குக் கோபத்தால்) சிரிப்புஉண்டாயின; வான் உளோர் நாட்டம் அழிந்தன - (இனி என்னாகுமோ என்று அஞ்சி மனம் கலங்கியதனால்) தேவர்களுடைய கண்களும் கலக்கம்அடைந்தன. அனுமனதுசினத்தீச்சுடர், இந்திரசித்து வீசிய அம்புகளைச் சுட்டுப் பயனற்றவை ஆக்கின என்பது கருத்து. (59) | 5776.. | தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப் பாரின் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத் தோள் வீரர் வீரனும்,முறுவலும் வெகுளியும் வீங்க, ‘வாரும், வாரும்’ என்று அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான். |
தேரும்,யானையும், புரவியும், அரக்கரும் சிந்தி பாரின் வீழ்தலும் -தேர்களும், யானைகளும், குதிரைகளும், அரக்கப் போர் வீரர்களும் சிதறி, தரையில் அடிபட்டு விழுந்தவுடன்; தான் ஒரு தனி நின்ற - தான் ஒருவன் மாத்திரமே தன்னந்தனியாய் எஞ்சி நின்ற; பணை தோள் வீரர் வீரனும் - பருத்த தோள்களை உடைய மகாவீரனாகிய இந்திரசித்தும்; முறுவலும் வெகுளியும் வீங்க - புன் சிரிப்பும் கோபமும் அதிகரிக்க; வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன் மேல் வந்தான் - வாருங்கள் வாருங்கள் என்று மேன்மேலும் உற்சாகத்தோடு கூப்பிடுகின்ற அனுமன்மீது எதிர்த்துப் போரிட வந்தான். வாரும் வாரும் என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இகழ்ச்சியுடன் அழைதத் அனுமனுடன் போர் செய்ய வந்தான் இந்திரசித்து. (60)
| 5777. | புரந்தரன்தலை பொதிர் எறிந்திட, புயல் வானில் பரந்த பல்உரும்ஏற்றுஇனம் வெறித்து உயிர் பதைப்ப, | |