| | நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் சிரம் துளங்கிட,அரக்கன் வெஞ் சிலையைநாண் தெறித்தான். |
புரந்தரன் தலைபொதிர் எறிந்திட - இந்திரன் தலைநடுக்கம் மேலிடவும்; வானில் பரந்த புயல் பல் உரும் ஏற்று இனம் - ஆகாயத்தில் பரந்து விளங்கிய மேகங்களில் உள்ள பல பெரிய இடிகளின் கூட்டம்; வெறித்து உயிர் பதைப்ப - அச்சத்தால் மயக்கம் கொண்டு உயிர் நடுங்கவும்; நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் - எப்போதும் உலகம் முழுவதையும் தாங்கிக் கொண்டுள்ள நீண்ட பாம்பாகிய ஆதிசேடன்; சிரம் துளங்கிட - தன் ஆயிரம் தலைகளும் அச்சத்தால் நடுங்கவும்; அரக்கன் வெஞ்சிலையை நாண் தெறித்தான் - அரக்கனாகிய இந்திரசித்து, தன் வில்லின் கொடிய நாணைக் கை விரலால் தெறித்து ஒலி எழுப்பினான். இந்திரசித்துதனது வில்லின் நாணைத் தெறித்த போது, அச்சத்தால் நடுங்கிய பிறரது நடுக்கம் கூறப்பட்டது. பொதிர் - நடுக்கம். (61) | 5778. | ஆண்டநாயகன் தூதனும், அயனுடை அண்டம் கீ்ண்டதாம் என,கிரி உக, நெடு நிலம் கிழிய, நீண்ட மாதிரம்வெடிபட, அவன் நெடுஞ் சிலையில் பூண்ட நாண் இற,தன் நெடுந் தோள் புடைத்து ஆர்த்தான். |
ஆண்ட நாயகன் -(எல்லாஉயிர்களையும்) அடிமை கொண்டருளும் (திருமாலின் அவதாரமாகிய) இராமபிரானின் தூதனும் - தூதனான அனுமனும்; அயனுடை அண்டம் கீண்டதாம் என - (அவ்வொலிக்கு எதிராக) பிரம்மாண்டமே பிளந்தது என்று சொல்லும்படியாகவும்; கிரி உக - மலைகள் பொடியாய்ச் சிந்தும்படியாகவும்; நெடும் நிலம் கிழிய - நீண்ட பூமி பிளக்கும் படியும்; நீண்ட மாதிரம் வெடிபட - நெடிய திசைகள் பிளவுபடவும்; அவன் நெடுஞ்சிலையில் பூண்ட நாண்இற - இந்திர சித்தினது நீண்ட வில்லில் பூட்டிய நாண் அற்றுப் போகவும்; தன் நெடுந்தோள் புடைத்து ஆர்த்தான் -தனது நெடிய தோள்களைக் கொட்டிக் கர்ச்சனை செய்தான். |