பக்கம் எண் :

694சுந்தர காண்டம்

     கொடும்சினம் கொண்டான் - (கணைகள் அழுந்தப் பெற்ற அனுமன்)
கொடிய கோபம் கொண்டு; வான் குறிது என்று குறைந்திலன் - ஆகாயம்
உயர்வு போதாது என்று தன் வடிவு குறுகாதவனாய் (வான்முகட்டி)னும்
மேலாக வளர்ந்து); சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி -
தன் சிறியதாயான கைகேயி சொன்ன கட்டளை மொழிகளைத் தன் தலையால்
ஏற்று; மறியும் வெண் திரை மாகடல் உலகு எலாம் வழங்கி - மடங்குகின்
றவெண்மையான அலைகளை உடைய பெரிய கடலினால்
சூழப்பட்ட உலகம்முழுவதையும் (தன் தம்பியாகிய பரதனுக்கு) அளித்து;
நெறியில் நின்ற தன்நாயகன் புகழ் என -
அறநெறியில் தங்கி நின்ற
தனது தலைவனானஇராமபிரான் புகழேபோல; நிமிர்ந்தான் - பேருரு
எடுத்துக் கொண்டுநின்றான்.

     இராமபிரான்புகழ் அனுமனின் நெடுமைக்கு உவமை கூறப்பட்டது. (66)

5783.

பாகம்அல்லது கண்டிலன்; அனுமனைப் பார்த்தான்;
மாக வன் திசைபத்தொடும் வரம்பு இலா உலகிற்கு
ஏக நாதனை எறுழ்வலித் தோள் பிணிந்து ஈர்த்த
மேக நாதனும்,மயங்கினனாம் என வியந்தான்.

     மாகவன் திசை -பெரியவானம் முதலான; பத்தொடும் - வலிய
திசைகள் பத்துடன்; வரம்பு இலா உலகிற்கு ஏகநாதனை - அளவற்ற
உலகங்களுக்கு எல்லாம் தனித்தலைவனான இந்திரனை; எறுழ் வலித் தோள்
பிணிந்து  ஈர்த்த  மேகநாதனும் -
மிக்க வலிமையை உடைய தோள்களைக்
கட்டி இழுத்த இந்திரசித்தும்; அனுமனைப் பார்த்தான் பாகம் அல்லது
கண்டிலன் -
அனுமனைப் பார்த்து, அவனது உருவில் ஒரு சிறு பகுதியே
அல்லாமல் முழு உருவும் காணாதவனாகி; மயங்கினன் ஆம் என
வியந்தான் -
திகைப்புண்டவன் போல ஆச்சரியமுற்றான்.          (67)

5784.

நீண்டவீரனும், நெடுந் தடங் கைகளை நீட்டி,
ஈண்டு வெஞ் சரம்எய்தன எய்திடாவண்ணம்,
மீண்டு போய்விழ வீசி, ஆங்கு அவன் மிடல்
                               தடந் தேர்
பூண்ட பேயொடு,சாரதி தரைப்பட, புடைத்தான்.