பக்கம் எண் :

696சுந்தர காண்டம்

     கொற்றமாருதி - வெற்றியை உடைய அனுமன்; உற்ற உரத்து
அடங்கின வாளிகள் -
வந்து பட்டவையாய் மார்பில் பதிந்தவைகளான
(இந்திரசித்தின்) அம்புகள் அனைத்தும்; உக உதறா - கீழே சிந்தும்படி
உதறித் தள்ளிவிட்டு; அவன் தேர் மிசை குதித்து - இந்திரசித்துவின்
தேரின்மேல் எழும்பிப் பாய்ந்து; உலகு எலாம் பல கால் முற்றி வென்ற
போர்மூரி வெம் சிலையினை - 
உலகும் யாவையும் பல முறை முழுவதும்
வென்றதான போரில் சிறந்த அவனது வலிய வில்லினை; வன் கையால் பற்றி
-
தனது வலிய கையினால் பிடித்து; பறித்து எழுந்து முறித்தான் -பிடுங்கிக்
கொண்டு வெளியே வந்து ஒடித்தெறித்துவிட்டான்.

      அனுமன் ஆற்றல்கூறப்பட்டது.                           (70)

5787.

முறிந்தவில்லி்ன் வல் ஓசை போய் முடிவதன்முன்னர்,
மறிந்து போரிடைவழிக் கொள்வான், வயிர வாட்
                                  படையால்
செறிந்த வான்பெரு மலைகளைச் சிறகு அறச்
                                  செயிரா
எறிந்தஇந்திரன் இட்ட, வான் சிலையினை
                                 எடுத்தான்.

     முறிந்தவில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர் -
ஒடிபட்டஅந்த வில்லி்ன் வலிய ஓசை அடங்குவதற்கு முன்னே, (இந்திரசித்து);
போரிடை மறிந்து வழிக் கொள்வான் -
போரை மீண்டும் தொடர வேண்டி;
வயிர வாள் படையால் -
வச்சிராயுதம் என்னும் வாளால்; செறிந்த வான்
பெரு மலைகளை -
அடர்ந்த மிகப்பெரிய மலைகளை; சிறகு அற செயிரா
எறிந்த இந்திரன் -
இறகுகள் அற்றுப் போகும் படி சினங் கொண்டு
துணித்தவனான தேவேந்திரன்; இட்ட வான்சிலையினை எடுத்தான் -
திறையாகக் கொடுத்த பெரிய வில்லைக் கையில் எடுத்துக் கொண்டான்.

     அந்த வில்ஒடிந்தவுடனே வேறு ஒரு வில்லை எடுத்துக் கொண்டான்
இந்திரசித்து. அது, இந்திரன் தனது தோல்விக்குப் பிறகு, திறையாக
இந்திரசித்துக்குக் கொடுத்தது.                                 (71)

5788.

நூறு நூறுபோர் வாளி, ஓர் தொடை கொடு,
                              நொய்தின்,
மாறு இல் வெஞ்சினத்து இராவணன் மகன் சிலை
                             வளைத்தான்;