பக்கம் எண் :

698சுந்தர காண்டம்

5790.

பார மா மரம் முடியுடைத் தலையிடைப் படலும்,
தாரையின் நெடுங்கற்றைகள் சொரிவன தயங்க,
ஆர மால் வரைஅருவியின் அழி கொழுங் குருதி
சோர நின்றுஉடல் துளங்கினன்-அமரரைத்
                            தொலைத்தான்.

     அமரரைத்தொலைத்தான் - தேவர்களை வென்றவனானஇந்திரசித்து;
முடியுடைத் தலையிடை -
கிரீடம் அணிந்த தனது தலையின் மேல்; பார
மாமரம் படலும் -
வலியதும் பெரியதுமான அந்த மராமரம் பட்ட அளவிலே;
நெடும் கற்றைகள் தாரையின் சொரிவன தயங்க -
(கீரிடத்தில் உள்ள
மாணிக்கங்களின்) நீண்ட ஒளித் தொகுதிகள் ஒழுங்காக மேற்
சொரிவனவற்றைப் போன்று விளங்கும்படி; மால் வரை அருவியின் - பெரிய
மலையிலிருந்து வருகின்ற நீர் அருவிபோல; அழி கொழுங்குருதி ஆர சோர
-
வழிகின்ற கொழுமையான இரத்தம் மிகுதியாகப் பெருக; நின்று, உடல்
துளங்கினான் -
(ஏங்கித் தளர்ச்சியுற்று) நின்று, உடம்பு நடுங்கினான்.   (74)

5791.

நின்று,போதம் வந்துறுதலும், நிறை பிறை எயிற்றைத்
தின்று, தேவரும்முனிவரும் அவுணரும் திகைப்ப,
குன்றுபோல் நெடுமாருதி ஆகமும் குலுங்க,
ஒன்று போல்வன,ஆயிரம் பகழி கோத்து உய்த்தான்.

     நின்று - (இந்திரசித்து)சிறிது போது அயர்ச்சியுற்று நின்று; போதம்
வந்து உறுதலும் -
பிறகு அறிவு வந்து கூடின அளவில்; நிறை பிறை
எயிற்றை தின்று -
தன் வாயில் நிறைந்துள்ளனவும் பிறைச்சந்திரன்
போன்றனவுமான பற்களைக் கோபத்தினால் கடித்து; தேவரும், முனிவரும்
அவுணரும் திகைப்ப -
தேவர்களும் இருடிகளும் அசுரர்களும் யாதாகுமோ
என்று ஏக்கமுற; குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க - மலை
போன்ற உயர்ந்த வடிவமுள்ள அனுமனது உடலும் நடுங்க; ஒன்று போல்
வன -
ஒரே தன்மையான (வேறுபாடு இல்லாத); ஆயிரம் பகழி கோத்து
உய்த்தான் -
ஆயிரம் அம்புகளை, வில்லில் பூட்டி அனுமன் மீது
செலுத்தினான்.                                              (75)

5792.

உய்த்தவெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப,
கைத்தசிந்தையன் மாருதி, நனி தவக் கனன்றான்;