பக்கம் எண் :

பாசப் படலம்699

 

வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி,
அத் தடம் பெருந்தேரொடும் எடுத்து, எறிந்து,
                                ஆர்த்தான்.

     உய்த்த வெம்சரம் - அவ்வாறு இந்திரசித்து செலுத்திய கொடிய
அம்புகள்; உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப - தனது மார்பிலும் கைகளிலும்
அழுந்த; மாருதி - அனுமன்; கைத்த சிந்தையன் நனிதவகனன்றான் -
வெறுத்த மனத்தினனாய், மிகவும் கோபம் மேற் கொண்டவனாய்; வித்தகன்
சிலை விடுகணை விசையினும் கடுகி -
ஞானவடிவனான இராமபிரான்
வில்லில் தூண்டும் அம்பின் வேகத்தினும் அதிக வேகமாகச் சென்று;
அத்தடம் தேரொடும் எடுத்து - அந்த மிகப் பெரிய தேருடனே
(இந்திரசித்தைத்) தூக்கி; எறிந்து ஆர்த்தான் - மேலே வீசி எறிந்து
ஆரவாரஞ் செய்தான்.

     அனுமன்,இந்திரசித்தைத் தேரோடு எடுத்து எறியச் செல்லும்
வேகத்துக்கு, இராமபிரானது அம்பின் வேகம் உவமை கூறப்பட்டது. வித்தகன்
- மேலோன். (இராமபிரான்)                                   (76)

5793.

கண்ணின்மீச் சென்ற இமை இடை கலப்பதன்
                                 முன்னம்,
எண்ணின் மீச்சென்ற எறுழ் வலித் திறலுடை
                                 இகலோன்,
புண்ணின் மீச்சென்று பொழி புனல் பசும் புலால்
                                பொடிப்ப,
விண்ணின் மீச்சென்று, தேரொடும் பார்மிசை
                                வீழ்ந்தான்.

     எண்ணின் மீசென்ற எறுழ்வலி திறலுடை இகலோன் -
எண்ணத்தைக் கடந்து சென்ற (வரம்பு கடந்த) மிக்க வலிமையுடைய
பகைவனான இந்திரசித்து; தேரொடும் விண்ணின் மீ சென்று - (அனுமன்
எடுத்தெறிந்த விசையினால்) தேரோடும் வானத்தின்மேல் எல்லையில் போய்;
புண்ணின் மீ சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப - புண்களின்
மேலே பெருகி வழிகின்ற இரத்தம் புதிய புலால் நாற்றத்தோடு வெளிப்பட;
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன் முன்னம் - கண்களின் மேல்உள்ள