பக்கம் எண் :

704சுந்தர காண்டம்

     சாய்ந்த மாருதி- கீழேவிழுந்த அனுமன்; சதுமுகன் படை எனும்
தன்மை ஆய்ந்து -
(தன் மேற் செலுத்தியது) பிரம்மாத்திரம் என்னும்
உண்மையை உணர்ந்தறிந்து; இதன் ஆணையை அவமதித்து அகறல்
ஏய்ந்தது அன்று என எண்ணினன் -
இதன் கட்டளையை இகழ்ந்து
இதனைவிட்டு நீங்குதல் தக்கதன்று எனக் கருதியவனாய்; கண் முகிழ்த்து
இருந்தான் -
கண்ணை மூடிக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டவன் போல்
இருந்தான்; அரக்கன் ‘இவன் வலி ஓய்ந்தது ஆம்’ என - அரக்கனாகிய
இந்திரசித்து, இவனுடையவலிமை ஒழிந்துவிட்டது என்று எண்ணி; வந்துற்றான்
-
அனுமன் அருகில் வந்தடைந்தான்.

     வர பலத்தால்பிரம்மாத்திரத்தையும் கடக்கும் ஆற்றல் உள்ளவனாயினும்,
அனுமன் பிரம்ம தேவனைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற
பெருந்தகையினால், அதற்குக் கட்டுப்பட்டிருந்தான் என்க.            (84)

அரக்கர் அனுமனைச்சூழ்ந்து ஆரவாரித்தல்

5801.

உற்றகாலையின், உயிர்கொடு திசைதொறும் ஒதுங்கி
அற்றம்நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று
                               அரக்கர்-
சுற்றும் வந்து,உடல் சுற்றிய தொளை எயிற்று
                              அரவைப்
பற்றிஈர்த்தனர்; ஆர்த்தனர்; தெழித்தனர்-பலரால்.

     உற்ற காலையின்- (இவ்வாறு இந்திரசித்து அனுமன் அருகில் வந்து)
சேர்ந்தபோது; உயிர் கொடு - முன் அனுமனுடன் போர் செய்ய அஞ்சித்தம்
உயிரைக் காப்பாற்றிக் கொண்டு; திசைதொறும் ஒதுங்கி - நான்கு
திசைகளிலும் ஓடி மறைந்து; அற்றம் நோக்கினர் - (அனுமனுக்குச்) சோர்வு
நேரும் சமயத்தை எதிர் பார்த்து; நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர்பலர் -
நின்ற, ஒளி தங்கிய பற்களையுடைய அரக்கர்களில் பலர்; சுற்றும் வந்து -
அனுமனை நாற்புறங்களிலும் சூழ்ந்து வந்து; உடல் சுற்றிய தொளை எயிற்று
அரவை -
அனுமன் உடம்பைச் சுற்றிக் கொண்டிருந்த, துவாரமுள்ள
விஷப்பற்களை உடைய அரவ வடிவான அந்தப் பிரம்மாத்திரத்தை; பற்றி
ஈர்த்தனர் தெழித்தனர் -
பிடித்து இழுத்து ஆர்த்தனர் பெருமுழக்கமிட்டு
அனுமனை அதட்டினார்கள்.                                    (85)