அயன் படையில்கட்டுண்ட அனுமன் தோற்றம் | 5802. | ‘குரக்குநல் வலம் குறைந்தது’ என்று, ஆவலம் கொட்டி இரைக்கும் மாநகர் எறி கடல் ஒத்தது; எம் மருங்கும் திரைக்கும்மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர், அரக்கர்ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன், அனுமன். |
குரக்கு நல் வலம்- குரங்கினுடைய நல்ல வலிமை; குலைந்தது என்று- நிலை கெட்டது என்று எண்ணிக் களித்து; ஆவலம் கொட்டி இரைக்கும்மாநகர் - வாய்விட்டு உரக்கக்கத்தி, முழக்கமிடும் அந்தப் பெரிய இலங்கைநகரம்; எறிகடல் ஒத்தது - அலைமோதும் கடலை ஒத்திருந்தது;எம்மருங்கும் திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது - எப்புறமும் அனுமன்உடலைச் சுற்றிப் பிணித்த பிரம்மாத்திரமாகிய பாம்பு வாசுகி என்னும் பாம்பைஒத்து விளங்கியது; அரக்கர் தேவர் ஒத்தனர் - அரக்கர்கள், முன் கடல்கடைந்த தேவர்களை ஒத்து விளங்கினர்; அனுமன் மந்தரம் ஒத்தனன் -(நாக பாசத்தால் சுற்றப் பட்ட) அனுமன், (வாசுகியால் சுற்றப்பட்ட) மந்தரமலையைப் போன்று விளங்கினான். (86) | 5803. | கறுத்தமாசுணம், கனக மா மேனியைக் கட்ட, அறத்துக்கு ஆங்குஒரு தனித் துணை என நின்ற அனுமன், மறத்து, மாருதம்பொருத நாள், வாள் அரா அரசு புறத்துச் சுற்றியமேரு மால் வரையையும் போன்றான். |
கறுத்த மாசுணம் -கோபம்கொண்ட அந்தப் பிரம்மாத்திரமாகிய பாம்பு; கனகமா மேனியை கட்ட - பொன்னிறமான அனுமன் திருமேனியை வலிதில் இறுக்கிப் பிணிக்க; அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் - தரும தேவதைக்கு, அந்த இலங்கையில் தான் ஒருவனே துணைவனாக இருந்த அனுமன்; மறத்து மாருதம் பொருத நாள் வாள் அர அரசு - வலிமையோடு காற்று வீசியடித்த காலத்து, ஒளி தங்கிய அரவுக்கரசனான ஆதிசேடன்; புறத்து சுற்றிய - தன் வெளிப் புறமெல்லாம் நன்றாகச் சுற்றிக் கொண்டதாய் இருந்த; |