பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்713

     அளவு இல்ஆற்றலர் - அளவற்ற வலிமை உடையவர்களும்;
மொய்ம்பினின் எறுழ் வலிகருளன் மும்மையார் -
தம் தம் பராக்கிரமத்தில்
மிக்கவர்களுமான; கிங்கரர் ஐம்பதினாயிரம் ஒரு புடைகிளர்ந்து -
ஐம்பதினாயிரம் ஏவலர்கள் ஒரு பக்கத்தில் வந்து கூடி நின்று; பைங்கழல்
அனுமனைப் பிணித்த பாந்தளைப் பற்றினார் -
பசுமையான வீரக்கழலை
உடைய அனுமனைக் கட்டியுள்ள நாக பாசத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு
செல்வாராயினர்.

     ஒரு புடை என்றதனால், மறுபக்கத்திலும் ஐம்பதினாயிரர் பற்றியிருக்க
வேண்டும் என்று உணரலாம்.                                  (12)

5817.

‘திண்திறல் அரக்கர்தம் செருக்குச் சிந்துவான்,
தண்டல் இல் தன்உருக் கரந்த தன்மையான்,
மண்டு அமர்தொடங்கினன், வானரத்து உருக்
கொண்டனன்,அந்தக்கொல்?’ என்றார் பலர்.

     அந்தகன் - (முன்புஇராவணனுக்குத் தோற்று ஓடிய) எமன்; திண்
திறல்அரக்கர் தம் செருக்கு சிந்துவான் -
மிக்க வலிமை உடைய
அரக்கர்களதுகருவத்தை அழிக்கும் பொருட்டு; தண்டல் இல் தன் உரு
கரந்ததன்மையான் -
அழிதல் இல்லாத தனது வடிவத்தை மறைத்துக்
கொண்டவனாய்; வானரத்து உரு கொண்டனன் - குரங்கு வடிவத்தை
எடுத்துக் கொண்டு; மண்டு அமர் தொடங்கினன் கொல் - மிக்க போரைத்
தொடங்கிச் செய்தனனோ ?; என்றார் பலர் - என்று கூறினார் பல
அரக்கர்கள்.

     அனுமன் யாவன்என்பதைப் பற்றி அரக்கர் தமக்குள்
ஆராய்ந்தமையைத் தெரிவித்தவாறு.                            (13)

5818.

அரமியத்தலம்தொறும், அம் பொன் மாளிகைத்
தரம் உறுநிலைதொறும், சாளரம்தொறும்,
முரசு எறிகடைதொறும், இரைத்து மொய்த்தனர்-
நிரை வளைமகளிரும், நிருத மைந்தரும்.

     நிரைவனைமகளிரும் - வரிசையான பலவளையல்களை அணிந்த
அரக்க மகளிரும்; அரமியம் தலம் தொறும் - மாளிகையின்மேல் உள்ள
நிலா முற்றங்களிலும்; அம் பொன் மாளிகை தரம் உறு நிலை தொறும் -
அழகிய பொன்மயமான வீடுகளின் மேல் நிலைகளிலும்; சாளரம் தொறும் -
பலகணிகளிலும்; முரசு எறிகடை தொறும் - பேரிகைகள் முழக்கும்