இடங்களிலும்;இரைத்து மொய்த்தனர் - முழக்கமிட்டுக் கொண்டு கூடி நெருங்கியிருந்தனர். வீதியில் இடம்இல்லாமையைத் தெரிவிக்கின்றது. (14) 5819. | ‘கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன், மயில் இயல்சீதைதன் கற்பின் மாட்சியால், எயிலுடைத் திருநகர் சிதைப்ப எய்தினன், அயில் எயிற்றுஒரு குரங்கு ஆய்’ என்பார், பலர். |
கயிலையின்ஒருதனி கணிச்சிவானவன் - கயிலைமலை மீது உள்ள ஒப்பற்ற மழு என்னும் ஆயுதத்தை ஏந்திய சிவபிரானாகிய தேவன்; மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியால் - மயில் போன்ற சாயலை உடைய சீதையின் பெருமையால்; அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் - கூரிய பற்களை உடைய ஒரு குரங்கின் வடிவமாய்; எயில் உடை திருநகர் சிதைப்ப எய்தினன் - மதில்களை உடைய இந்த அழகிய இலங்கை நகரை அழிக்கவந்து அடைந்துள்ளான்; என்பார் பலர் - என்று பல அரக்கர்கள் கூறுவாராயினர். (15) 5820. | அரம்பையர், விஞ்சை நாட்டு அளக வல்லியர், நரம்பினும் இனியசொல் நாக நாடியர், கரும்பு இயல்சித்தியர், இயக்கர் கன்னியர், வரம்பு அறுசும்மையர், தலைமயங்கினார். |
அரம்பையர் -தேவமகளிர்; விஞ்சை நாட்டு அளகவல்லியர் - வித்தியாதர நாட்டுக் கூந்தலை உடைய கொடி போன்ற பெண்கள்; நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் - யாழ் நரம்பின் இசையை விட இனிய சொற்களை உடைய நாகலோகத்துக் கன்னியர்; கரும்பு இயல் சித்தியர் - (தம்மை நுகர்வார்க்கு) கரும்பு போன்ற சுவையை நல்கும் சித்த கணப்பெண்கள்; இயக்கர் கன்னியர் - யட்சகுலமகளிர்; வரம்பு அறு சும்மையர் - அளவற்ற இரைச்சலுடையவர்களாய்; தலை மயங்கினார் - எல்லா இடங்களிலும் வந்து கூடினார்கள். இவர்கள்,இராவணனால் அபகரிக்கப்பெற்று இலங்கையில் கொண்டு வந்து வைத்திருந்த அவனுடைய காதல் மகளிர்கள். சும்மை - ஒலி. ‘இழுமென் சும்மை’ - (பொருந. 65) |