5821. | ‘நீரிடைக்கண் துயில் நெடிய நேமியும், தாருடைத் தனிமலர் உலகின் தாதையும், ஓர் உடல்கொண்டு, தம் உருவம் மாற்றினர், பாரிடைப்புகுந்தனர் பகைத்து’ என்பார் பலர்.* |
நீரிடை கண்துயில் நெடிய நேமியும் - திருப்பாற்கடலில்பள்ளி கொண்டுள்ள பெரிய சக்கராயுதத்தை உடைய திருமாலும்; தார் உடை தனிமலர் உலகின் தாதையும் - தாமரை மலர் மாலை அணிந்து உலகத்தைப் படைத்தவனான பிரம்மதேவனும்; பகைத்து - அரக்கர்களோடு பகைமை கொண்டு; ஓர் உடல் கொண்டு உருவம் மாற்றினர் - சேர்ந்து ஓர் உடலைத்தாங்கி, தமது வடிவை மாற்றிக் கொண்டவர்களாய்; பாரிடை புகுந்தனர் - நிலவுலகத்தில் வந்து பிரவேசித்துள்ளார். என்பார் பலர் - என்று கருதினர் பல அரக்கர்கள். பிரம்மாவும்திருமாலும் தாமான தனித்தனி நிலையில் அரக்கர்களை அழிக்கும் வலிமையற்றவர்களாய், ஒன்று ஆகிக் குரங்கின் வடிவில் வந்தனர் எனக்கருதினர் பலர். (17) 5822. | அரக்கரும்அரக்கியர் குழாமும் அல்லவர் கரக்கிலர், நெடுமழைக் கண்ணின் நீர்; அது, விரைக் குழல்சீதைதன் மெலிவு நோக்கியோ ? இரக்கமோ ?அறத்தினது எளிமை எண்ணியோ ? |
அரக்கரும்அரக்கியர் குழாமும் அல்லவர் - அரக்க ஆடவர் மகளிர்களுடைய கூட்டம் அல்லாதவர்களான தேவர் முதலிய அரம்பையர்கள்; நெடு மழை கண்ணின் நீர் கரக்கிலர் - நெடிய மழை போலும், (பெருகிய தம்) கண்ணீரை மறைக்காதவர் களாயினர்; அது - அவ்வாறு கண்ணீர் பெருகிய செயல்; விரை குழல் சீதை தன் மெலிவு நோக்கியோ ? - நறுமணமுள்ள கூந்தலை உடைய சீதா பிராட்டியின் துன்பத்தைக் கருதியோ ?; இரக்கமோ ? - அனுமனுக்கு உண்டான துன்பத்தால் ஏற்பட்ட இரக்கத்தாலோ ?; அறத்தினது எளிமை எண்ணியோ ? - தருமத்தினது, எளிமையைக் கருதியதனாலோ (நேர்ந்தது). அரக்கர்யாவரும், அச்சம், வெறுப்பு சினம் ஆகியவை கொண்டிருக்க, தேவர் முதலியோர் இரக்கமும் துன்பமும் கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டது. (18) |