பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்715

5821.

‘நீரிடைக்கண் துயில் நெடிய நேமியும்,
தாருடைத் தனிமலர் உலகின் தாதையும்,
ஓர் உடல்கொண்டு, தம் உருவம் மாற்றினர்,
பாரிடைப்புகுந்தனர் பகைத்து’ என்பார் பலர்.*

     நீரிடை கண்துயில் நெடிய நேமியும் - திருப்பாற்கடலில்பள்ளி
கொண்டுள்ள பெரிய சக்கராயுதத்தை உடைய திருமாலும்; தார் உடை
தனிமலர் உலகின் தாதையும் -
தாமரை மலர் மாலை அணிந்து உலகத்தைப்
படைத்தவனான பிரம்மதேவனும்; பகைத்து - அரக்கர்களோடு பகைமை
கொண்டு; ஓர் உடல் கொண்டு உருவம் மாற்றினர் - சேர்ந்து ஓர்
உடலைத்தாங்கி, தமது வடிவை மாற்றிக் கொண்டவர்களாய்; பாரிடை
புகுந்தனர் -
நிலவுலகத்தில் வந்து பிரவேசித்துள்ளார். என்பார் பலர் -
என்று கருதினர் பல அரக்கர்கள்.

     பிரம்மாவும்திருமாலும் தாமான தனித்தனி நிலையில் அரக்கர்களை
அழிக்கும் வலிமையற்றவர்களாய், ஒன்று ஆகிக் குரங்கின் வடிவில் வந்தனர்
எனக்கருதினர் பலர்.                                       (17)

5822.

அரக்கரும்அரக்கியர் குழாமும் அல்லவர்
கரக்கிலர், நெடுமழைக் கண்ணின் நீர்; அது,

விரைக் குழல்சீதைதன் மெலிவு நோக்கியோ ?
இரக்கமோ ?அறத்தினது எளிமை எண்ணியோ ?

     அரக்கரும்அரக்கியர் குழாமும் அல்லவர் - அரக்க ஆடவர்
மகளிர்களுடைய கூட்டம் அல்லாதவர்களான தேவர் முதலிய அரம்பையர்கள்;
நெடு மழை கண்ணின் நீர் கரக்கிலர் -
நெடிய மழை போலும், (பெருகிய
தம்) கண்ணீரை மறைக்காதவர் களாயினர்; அது - அவ்வாறு கண்ணீர்
பெருகிய செயல்; விரை குழல் சீதை தன் மெலிவு நோக்கியோ ? -
நறுமணமுள்ள கூந்தலை உடைய சீதா பிராட்டியின் துன்பத்தைக் கருதியோ ?;
இரக்கமோ ? - அனுமனுக்கு உண்டான துன்பத்தால் ஏற்பட்ட இரக்கத்தாலோ
?; அறத்தினது எளிமை எண்ணியோ ? - தருமத்தினது, எளிமையைக்
கருதியதனாலோ (நேர்ந்தது).

     அரக்கர்யாவரும், அச்சம், வெறுப்பு சினம் ஆகியவை கொண்டிருக்க,
தேவர் முதலியோர் இரக்கமும் துன்பமும் கொண்டிருந்தனர் என்று
கூறப்பட்டது.                                             (18)