கட்டு்ப்பட்டுச்செல்லும் அனுமன் கருத்து | 5823. | ஆண்தொழில் அனுமனும், அவரொடு ஏகினான்; மீண்டிலன்;வேறலும் விரும்பலுற்றிலன்; ‘ஈண்டு இதுவேதொடர்ந்து இலங்கை வேந்தனைக் காண்டலே நலன்’எனக் கருத்தின் எண்ணினான். |
ஆண் தொழில்அனுமனும் - ஆண்மைத் தொழிலின்மிக்க அனுமனும்; மீண்டிலன் - திரும்பிச் செல்லாதனாயும்; வேறலும் விரும்பல் உற்றிலன் - அவர்களை வெல்லுதலையும் விரும்பாதவரையும்; ஈண்டு இதுவே தொடர்ந்து - இங்கு இப்படியே தொடர்ந்து சென்று; இலங்கை வேந்தனைக் காண்டலே நலன் - இலங்கை அரசனான இராவணனைப் பார்ப்பதே நல்லதாகும்; என கருத்தில் எண்ணினன் - என்று மனத்தில் நினைத்தவனுமாகி; அவரொடு ஏகினான் - அவ்வரக்கர்களுடனே தானும் கூடச் சென்றான். ‘தொடர்ந்துபோய்’ என்னும் பாடம் ஓசைச் சிதைவு நோக்கி விடப்பட்டது. (19) | 5824. | ‘எந்தையதுஅருளினும், இராமன் சேவடி சிந்தை செய்நலத்தினும், சீதை, வானவர், தந்து உளவரத்தினும், தறுகண் பாசமும் சிந்துவென்;அயர்வுறு சிந்தை சீரிதால்; |
எந்தையதுஅருளினும் - என் தந்தையான வாயுதேவனது கருணையினாலும்; இராமன் சேவடி சிந்தை செய் நலத்தினும் - இராமபிரான்சிவந்த திருவடிகளை யான் தியானம் செய்யும் புண்ணியத்தாலும்; சீதை,வானவர் தந்துள வரத்தினாலும் - சீதா பிராட்டியும் தேவர்களும் கொடுத்துள்ள வரங்களினாலும்; தறுகண் பாசமும் சிந்துவென் - கொடிய இந்தப் பிரம்மாத்திரத்தையும் அற்றி சிதறிவிடச் செய்யவல்லேன் யான்; அயர்வுறு சிந்தை சீரிது - (ஆயினும்) இதனால் நான் களைப்புற்றமனத்தோடு இருப்பதே சிறப்புடைத்தாகும். ‘அயர்வுறு சிந்தைசீரிது’ என்ற தன் காரணம் அடுத்த நான்கு கவிகளில் விளங்கும். அதற்காகத்தான், அனுமன், அரக்கர்கள் தன்னைக் கட்டி ஈர்த்துச் செல்ல அடங்கியிருந்தான், என்பதாம். ஆல் - அசை. (20) |