| 5825. | ‘வளை எயிற்று அரக்கனை உற்று, மந்திரத்து அளவுறு முதியரும்அறிய ஆணையால் விளைவினைவிளம்பினால், மிதிலை நாடியை, இளகினன்,என்வயின் ஈதல் ஏயுமால்; |
வளை எயிற்றுஅரக்கனை உற்று - வளைந்த பற்களை உடைய அரக்கனாகிய இராவணனை அடைந்து; மந்திரத்து அளவுறு முதியரும் அறிய - ஆலோசனைச் சபைக்கு உரியராக அளந்து குறிப்பிடப்பட்ட முதியோர்களும் அறியும்படி; ஆணையால் விளைவினை விளம்பினால் - இராமபிரான் கட்டளைப் படி, மேல் நிகழக்கூடிய செயல்களை நான் எடுத்துக் கூறினால்; இளகினன் - (இராவணன்) மனவுறுதி குலைந்து நெகிழ்ந்து; மிதிலை நாடியை என் வயின் ஈதல் ஏயும் - மிதிலை நாட்டவளான சீதையை என்னிடம் கொடுத்து விடக்கூடும். சிந்தைச்சீர்மையால் விளையக் கூடிய முதற் பயன் இது. சீதையைச் சிறை வீடு செய்தல். ஆல் - ஈற்றசை. (21) | 5826. | ‘அல்லதூஉம், அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு எல்லையும்தெரிவுறும்; எண்ணும் தேறலாம்; வல்லவன்நிலைமையும் மனமும் தேறலாம்;- சொல் உக, முகம்எனும் தூது சொல்லவே; |
அல்ல தூஉம் -அதுஅல்லாமலும்; அவனுடை துணைவர் ஆயினார்க்கு - அந்த இராவணனுடைய துணைவர்களாய் உள்ளவரின்; எல்லையும் தெரிவுறும் - அளவும் தெரிவதாகும்; எண்ணும் தேறலாம் - அவர்களது உட்கருத்தையும் தெரிந்து கொள்ளலாம்; முகம் எனும் தூது சொல்லவே - ஒரு அரசனுக்கு முகம் என்று சொல்லத்தக்க தூதனாக வந்த நான் (இராமபிரான் சொல்லிய செய்தியை இராவணனிடம்) சொன்னவுடன்; சொல் உக - (அவன் வாயினின்று) வார்த்தைகள் சிந்துவனபோல் வெளிப்பட; வல்லவன் நிலைமையும் மனமும் தேறலாம் - (அதனால்) வலிமை உடைய இராவணனது நிலைமையையும் மனப்போக்கையும் தெரிந்து கொள்ளலாம். சிந்தைச்சீர்மையால் எதிர்பார்க்கப்படும் இரண்டாவது பயன் ! துணைவர் அளவும், இராவணனது நிலையும் மனமும் அறிதல் என்பதாகும். (22) |