பக்கம் எண் :

718சுந்தர காண்டம்

5827.

‘வாலிதன்இறுதியும், மரத்துக்கு உற்றதும்,
கூல வெஞ்சேனையின் குணிப்பு இலாமையும்,
மேலவன் காதலன்வலியும், மெய்ம்மையான்,
நீல் நிறத்துஇராவணன் நெஞ்சில் நிற்குமால்.

     வாலிதன்இறுதியும் - வாலியின் அழிவும்;மரத்துக்கு உற்றதும் -
மராமரத்துக்கு நேர்ந்த அபாயமும்; வெம்கூல சேனையின் குணிப்பு
இலாமையும் -
கொடிய குரங்குப் படையின் அளவற்ற தன்மையும்; மேலவன்
காதலன் வலியும் -
சூரிய குமாரனான சுக்கிரீவனுடைய வலிமையும்; நீல்
நிறத்து இராவணன் நெஞ்சில் -
(நான் சென்று சொல்வதால்) நீல நிறத்தை
உடைய இராவணனது மனத்தில்; மெய்ம்மையால் நிற்கும் - உள்ளபடி
பதியும்.

     சிந்தைச்சீர்மையின் மூன்றாவது பயன்; இராவணன் மனத்தில், வாலியின்
மரணம் முதலியன பதிதல் ஆகும்.                                (23)

5828.

‘ஆதலான், அரக்கனை எய்தி, ஆற்றலும்
நீதியும் மனக்கொள நிறுவி, நின்றவும்
பாதியின்மேல்செல நூறி, பைப்பையப்
போதலே கருமம்’என்று, அனுமன் போயினான்.

     ஆதலால் -‘ஆகையால்; அரக்கனை எய்தி - அரக்கனாகிய
இராவணனைச் சந்தித்து; ஆற்றலும் நீதியும் மனம்  கொள நிறுவி -
இராமபிரானுடைய வலிமையையும், நெறி முறையையும் அவன் உள்ளத்தில்
பதியும்படிச் செய்து; நின்றவும் - (அதன் பின்பும் இசையாது போனால்)
(இதுவரை என்னால் கொல்லப்பட்டவை போக) மீதியாக உள்ள அரக்கர்
சேனைகளில்; பாதியின் மேல் செல நூறி - பாதிக்கு மேலாக அழித்துவிட்டு;
பைபைய போதலே கருமம் -
(அவசரப் படாமல்) மெதுவாகப் போவதே
நான் செய்யத்தக்க காரியமாகும்; என்று - என்று எண்ணி; அனுமன்
போயினான் -
அனுமன் அடங்கி, அந்த அரக்கருடன் சென்றான்.

     நிறுவுதல், நூறுதல், போதல் இவைகளைத் தனது கடமையாகக்
கொண்டான் அனுமன். ஒன்றன் பின் ஒன்றாக இவைகளைச் செய்வது என்ற
முடிவுடன், அடக்கமாக அனுமன் அரக்கருடன் சென்றான் என்க. நூறுதல் -
அழித்தல்.                                                (24)