பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்723

வஞ்சனை உடையஇராக்கதனால்; பற்றுண்டாய் - சிறைப்படுத்தப் பெற்றாய்;
அறப்பான்மை இதுவோ - அறத்தின் இயல்பு இதுதானோ ?

     ‘சகல கலைகளையும்கற்ற நீ, ஒரு கள்ள அரக்கனால் கட்டுண்டாயே’
என்று அனுமனைப் பாராட்டி வருந்தினாள் பிராட்டி. ஆற்றலும் அறிவும்
பெற்றவர்கள் நன்மை அடைதல்தான் அறத்தின் பான்மை. இங்கு, அதற்கு நேர்
மாறான பயன் ஏற்பட்டுள்ளதால் அறத்தின் பான்மையோ ! என்று சீதா
பிராட்டி ஐயமுற்றாள் என்க.                                  (32)

5837.

‘கடர் கடந்து புகுந்தனை; கண்டகர்
உடர் கடந்தும்நின் ஊழி கடந்திலை;
அடர் கடந்ததிரள் புயத்து ஐய ! நீ
இடர்கள்தந்தனை, வந்து இடர் மேலுமே ?

     நீ கடர் கடந்துபுகுந்தனை - நீ, கடலைக் கடந்துஇங்கு வந்தாய்;
கண்டகர் உடர் கடந்தும் - முள் போன்று கொடியவர்களான பல
அரக்கர்களுடைய உடம்பின் வலிமையை அழித்து வெற்றி கொண்டு நின்றும்;
நின் ஊழி கடந்திலை - உனது வாழ்நாள் ஒழியப் பெற்றிலை (இவ்வாறு);
அடர் கடந்த திரள் புயத்து ஐய ! - பகைவர் வலிமையை வென்ற பருத்த
தோள்களை உடைய ஐயனே ! (நீ அரக்கர்கள் கையில் சிக்கியதனால்); வந்து
இடர் மேலும் இடர்கள் தந்தனை -
(கிட்கிந்தையினின்று) இங்கு வந்து
எனக்குத் துன்பத்தின் மேலும் துன்பங்களை உண்டாக்கியவனானாய்.

     இராமபிரானைப்பிரிந்ததனாலான துன்பத்தின் மேலும், இராம தூதன்
பகைவர் கையில் கட்டுண்டதனாலான துன்பம் சேர்ந்து மேன்மேலும்
வருத்துதலால் ‘வந்து இடர்கள் மேலும் இடர் தந்தனை என்று பிராட்டி கூறி
வருந்தினாள்.                                            (33)

5838.

‘ஆழி காட்டி, என் ஆர் உயிர் காட்டினாய்க்கு,
“ஊழிகாட்டுவென்” என்று உரைத்தேன்; அது
வாழி காட்டும்என்று உண்டு; உன் வரைப் புயப்
பாழி காட்டி,அரும் பழி காட்டினாய்.

     ஆழிகாட்டி -இராமபிரானது கணையாழியை யான் காணுமாறு
கொண்டுவந்து கொடுத்து; என் ஆருயிர்