பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்727

முக்கணான் கணிச்சியும்- விலக்கமுடியாத, முக்கண்ணனாகிய சிவபிரானது
சூலாயுதமும்; தாக்கிய தழும்பும் - தம் மீது பட்டு உண்டாக்கிய வடுக்களும்;
கள் உயிர்க்கும் மென் குழலியர் -
தேனைச் சொரியும் மிருதுவான கூந்
தலைஉடைய தன் காதல் மகளிர்; முகிழ் விரல் - அரும்பு போல்
குவிந்தவிரல்களில் உள்ள; கதிர்வாள் வள் உகிர் - சுடரோடு கூடிய வாள்
போன்றகூரிய நக நுனிகளால் உண்டாகிய; பெரும் குறிகளும் புயங்களில்
வயங்க -
பெரிய அடையாளங்களும் பெரிய தோள்களில் விளங்கவும்.

     இராவணனதுவீரத்துக்கும் காதலுக்கும் அடையாளமாக விளங்குகின்றன
அவன் தோள்களில் காணப்படும் வடுக்கள் என்பது கருத்து.          (39)

5844.

துன்று செம்மயிர்ச் சுடர் நெடுங் கற்றைகள் சுற்றி,
நின்று திக்குற,நிரல்படக் கதிர்க் குழாம் நிமிர,
ஒன்றுசீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை
                          உயிர்ப்ப,
தென் திசைக்கும்ஓர் வடவனல் திருத்தியது என்ன,

     துன்று செம்மயிர் சுடர் நெடுங்கற்றைகள் சுற்றி நின்று திக்குற -
அடர்ந்தசிவந்த மயிர்களின் ஒளியுள்ள நீண்ட தொகுதிகள் சுற்றிலும் பரந்து
நின்று எல்லாத்திசைகளிலும் அளாவ; நிரல்பட கதிர் குழாம் நிமிர -
(அவற்றினின்று) வரிசை வரிசையாக (சிவந்த) ஒளிப் பிழம்புகள் (அவனது கரிய
உடலின் மேல்) உயர்த்தெழுந்து விளங்குவதாலும்; ஒன்று சீற்றத்தின்
உயிர்ப்புஎனும் பெரும் புகை உயிர்ப்ப -
பொருந்திய கோபத்தால் எழுந்த
பெருமூச்சாகிய பெரிய புகை வெளிப்படுவதாலும்; தென் திசைக்கும் ஓர்
வடிஅனல் திருத்தியது என்ன -
தெற்குத் திசைக்கும், ஒரு வடவைத் தீயை,
அமைக்கப்பட்டதென்று சொல்லும்படியாகவும்.

     இராவணனதுசெம்மயிர்க்கற்றைகளும், அவன் விடும் கோபப்
பெருமூச்சும், தென் திசைக்கும் ஒரு வட அனல் (வடவாமுகாக்கனி)
அமைந்தவை போன்றிருந்தன என்பதாம்.                       (40)

5845.மரகதக்கொழுங் கதிரொடு மாணிக்க நெடு வாள்
நரக தேயத்துள்நடுக்குறா இருளையும் நக்க,
சிரம்அனைத்தையும் திசைதொறும் திசைதொறும்
                         செலுத்தி,
உரகர்கோன்இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப,