பக்கம் எண் :

778சுந்தர காண்டம்

5928. 

ஒக்க ஒக்கஉடல் விசித்த உலப்பு இலாத உரப்
                           பாசம்,
பக்கம் பக்கம்இரு கூறு ஆய், நூறாயிரவர்
                           பற்றினார்;
புக்க படைஞர்புடை காப்போர் புணரிக் கணக்கர்;
                           புறம் செல்வோர்,
திக்கின்அளவால்; அய் நின்று காண்போர்க்கு
                    எல்லை தெரிவு அரிதால்.

     ஒக்க ஒக்க உடல்விசித்த - பல ஒன்று சேர்ந்த,அனுமனது
உடலைக்கட்டிய; உலப்பு இலாத உரம் பாசம் - அழிவு இல்லாத வலிமை
உடையகயிறுகளை; பக்கம் பக்கம் இரு கூறு ஆய் - இரு பக்கங்களிலும்
இரண்டுபிரிவுகளாக; நூறு ஆயிரவர் பற்றினார் - நூறு ஆயிரம் (இலட்சம்)
அரக்கர்கள் பிடித்துக் கொண்டார்கள்; புக்க புடை காப்போர் படைஞர் -
அவர்களுடன் வந்த பக்கங்களிலிருந்து பாதுகாப்பவர்களாகிய ஆயுத
பாணிகள்; புணரிக் கணக்கர் - சமுத்திரம் என்னும் தொகை அளவினர்;
புறம்செல்வோர் திக்கின் அளவு -
அவர்களின் பக்கங்களில் சூழ்ந்து
வருபவர்கள், திக்குகளின் அளவு வரை உள்ளவர்; அயல் நின்று காண்
போர்க்கு எல்லை தெரிவு அரிது -
அதற்கும் அப்பால் நின்று வேடிக்கை
காண வருபவர்க்கு அளவு அறிய ஒண்ணாதது.

     அனுமனை இழுத்துச்செல்லும் போது அங்கு கூடிய அரக்கர்களின்
தொகை, நான்கு வகையாகக் கூறப்பட்டது. புணரிக் கணக்கு இருபத்தாறு
தானம் உடைய சமுத்திரம் என்ற எண்.                         (124)

5929.

‘அந்தநகரும் கடி காவும் அழிவித்து, அக்கன்
                              முதலாயோர்
சிந்த நூறி,சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப
வந்த குரங்கிற்குஉற்றதனை, வம்மின், காண வம்’
                              என்று,
தம்தம் தெருவும்,வாயில்தொறும், யாரும் அறியச்
                              சாற்றினார்.

     அந்த நகரும்கடிகாவும் அழிவித்து - (இராவணனின்ஏவலர்கள்)
இலங்கை நகரையும் காவல் மிகுந்த அசோகவனம் என்னும் சோலையையும்
அழியச் செய்தும்; அக்கன் முதலாயோர்