பக்கம் எண் :

78சுந்தர காண்டம்

அலட்சியம்செய்தமையால்; புறம்போய் - வெளியே சென்று; நேர் இயன்ற -
எதிரெதிராக உள்ள; வன்திசை தொறும் - வலிமைமிக்க திசைகள் தோறும்;
நின்றமா -
நிற்கின்ற யானைகள்; நிற்க - ஒதுங்கி நிற்க; இ நகர் தொகாத -
இந்நகரைச் சாராதவைகள் (யானைகளில்); ஆரியன் - (யானைகளில்)
சிவபிரான் பெற்றெடுத்த; தனி ஐங்கரக் களிறும் - ஒப்பற்ற ஐந்து கரங்களைப்பெற்ற விநாயகராகிய யானையும்; சூரியன் - தேர்களில்
சூரியனின்; ஓர்ஆழித் தனித்தேருமே - ஒரு சக்கரத்தையுடைய ஒப்பற்ற
தேருமே யாகும்.

     ஐங்கரக் களிறு -விநாயகப் பிரான், ஆரியன் என்றது தட்சிண
மூர்த்தியான சிவபிரானை. பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன் என்பார்
மணிவாசகர். ஆரியன் சாஸ்தா என்றும் கூறலாம். சாஸ்தாவின் வாகனம்
யானை.                                                 (11)

4846. 

வாழும் மன்னுயிர் யாவையும் ஒருவழி வாழும்
ஊழி நாயகன்திருவயிறு ஒத்துளது, இவ்வூர்;
ஆழி அண்டத்தின்அருக்கன்தன் அலங்கு தேர்ப்புரவி
ஏழும் அல்லன,ஈண்டுஉள குதிரைகள் எல்லாம்.

     இவ்வூர் -இந்தஇலங்கை மாநகர்; வாழும் மன்னுயிர் யாவையும் -
உலகில் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம்; ஒருவழி வாழும் - ஓரிடத்தில் கூடி
வாழ்கின்ற; ஊழி நாயகன் - ஊழிமுதல்வனான திருமாலின்; திருவயிறு
ஒத்துளது -
திருவயிற்றை ஒத்திருக்கிறது; ஆழி அண்டத்தின் - வட்டமான
அண்டத்திலுள்ள;  அருக்கன்தன் - சூரியனின்; அலங்குதேர் - அசைகின்ற
தேரில் பூட்டப்பெற்ற; புரவி ஏழும் அல்லன - ஏழு குதிரைகளைத் தவிர
(மற்றைய); குதிரைகள் எல்லாம் - எல்லாக் குதிரைகளும்; ஈண்டுஉள -
இங்கே உள்ளன.

     ஆழி -வட்டம்                                      (12)

4847..

தழங்குபேரியின் அரவமும், தகைநெடுங் களிறு
முழங்கும் ஓதையும்மூரிநீர் முழக்கொடு முழங்கும்;
கொழுங் குழல்புதுக் குதலையர் நூபுரக்குரலின்
வழங்குபேர் அருஞ்சதிகளும் வயின்தொறும் மறையும்.

     தழங்கு - ஒலிக்கும்; பேரியின் அரவமும் - முரசின் ஒலியும்; தகை
நெடுங்களிறு -
தகுதிமிக்க யானைகள்; முழங்கும் ஓதையும் -