பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்781

அனல் குளிர்ந்தமைகண்டு அனுமன் மகிழ்தல்

கலிவிருத்தம்

5932.

வெளுத்தமென் நகையவள் விளம்பும் ஏல்வையின்,
ஒளித்த வெங்கனலவன் உள்ளம் உட்கினான்;
தளிர்த்தனமயிர்ப் புறம் சிலிர்ப்ப, தண்மையால்,
குளிர்த்தது, அக்குரிசில் வால், என்பு கூரவே.+

     வெளுத்த மென்நகையவள் - வெண்மையான மெல்லியபற்களை
உடைய பிராட்டி; விளம்பும் ஏல்வையின் - இவ்வாறு கூறிய போது; ஒளித்த
வெம் கனலவன் உள்ளம் உட்கினான் -
ஒளி பெற்ற வெவ்விய தீக்கடவுள்
மனத்தில் அச்சம் கொண்டான்; புறம் மயிர்தண்மையால் சிலிர்ப்ப -
(அவ்வளவில், அனுமனின்) உடலின் மேல் உள்ள உரோமங்கள் குளிர்ச்சியால்
புளகித்து; தளிர்த்தன - செழிப்புற்றன; அக்குரிசில் வால் - அந்தச் சிறந்த
அனுமனது வால்; என்பு கூர குளிர்த்தது - எலும்பு வரையிலும் மிகுதியாக
(உட்புறமும்) குளிர்ச்சியடைந்தது.

      தீக்கடவுளின்வெம்மை நீங்கினவுடன், அனுமனது மயிர்ப்புறம்
சிலிர்ப்பத்தளிர்த்தன; வால் என்பு கூரக் குளிர்ந்தது என்க. குரிசில் -
ஆண்டகையான அனுமான்.                                (128)

அறுசீர் ஆசிரியவிருத்தம் 

5933.

மற்றுஇனிப் பல என் ? வேலை வட அனல், புவி
                            அளாய
கற்றை வெங்கனலி, மற்றைக் காயத் தீ, முனிவர்
                           காக்கும்
முற்றுறு மும்மைச்செந் தீ, முப்புரம் முருங்கச் சுட்ட
கொற்றவன்நெற்றிக் கண்ணின் வன்னியும்,
                          குளிர்ந்த அன்றே.

     வேலை வட அனல் -கடலில்உள்ள வடவாமுகாக் கினியும்; புவி
அளாய கற்றை வெம் கனலி மற்றை காயத் தீ -
பூமியில் பொருந்திய
தொகுதியாகிய வெப்பம் உள்ள நெருப்பும், அதுவல்லாதவானத்தில் அமைந்த
நெருப்பும்; முனிவர் காக்கும் முற்றுறுமும்மை செந்தீ - முனிவர்கள் காத்து
வளர்க்கும் (வைதிக