நியமம்) நிறைவேறற்குஉரிய மூன்றுவகை அக்கினிகளும்; முப்புரம் முருங்க சுட்ட கொற்றவன் நெற்றிக் கண்ணின் வன்னியும் - அசுரர்களுடைய திரிபுரங்கள் அழியச் சுட்டெரித்த வெற்றியை உடைய சிவபிரானது நெற்றிக் கண்ணிடத்தும் பொருந்தியுள்ள நெருப்பும்; குளிர்ந்த - குளிர்ச்சியை அடைந்தன; மற்று இனிப்பல என் - இனிப்பல சொல்வது என்ன இருக்கிறது?; அன்று, ஏ - அசைநிலைகள் (129) | 5934. | அண்டமும்கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது;-அங்கிக் குண்டமும்குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச் சண்ட வெங் கதிரஆகித் தழங்கு இருள் விழுங்கும் தா இல் மண்டலம்குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ. |
அண்டமும்கடந்தான் அங்கை அனலியும் குளிர்ந்தது - அண்டங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாலுள்ள சத்திய லோகத்தவனான பிரமனது உள்ளங்கையில் உள்ள நெருப்பும் குளிர்ச்சி அடைந்தது; அங்கி குண்டமும் குளிர்ந்த - வைதிக அக்கினிக் குண்டங்களும் குளிர்ந்துவிட்டன; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த - மேகத்தின் இடையில் உள்ள இடிகள் யாவும் குளிர்ச்சியுற்றன; கொற்றம் சண்டம் வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா இல் மண்டலம் குளிர்ந்த - வெற்றி பொருந்திய வலிய வெப்பம் மிகுந்த கிரணங்கள் கொண்டனவாய், முழங்கி எழும் இருளை விழுங்குகின்ற அழிவற்ற சூரிய மண்டலம் குளிர்ச்சியடைந்தது; மீளா நரகமும் குளிர்ந்த - தன் தன்மையினின்றும் மாறாத நரகத் தீயும் குளிர்ந்தது. பிராட்டியின்பிரார்த்தனைக்கு இரங்கி, எங்கும் உள்ள அக்கினிகளும் தம் கொடுமை நீங்கி அனுதாபம் காட்டலாயின என்பது கருத்து. (130) | 5935. | வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி, வெந் தீ நிற்பினும் சுடாதுநின்ற நீர்மையை நினைவின் நோக்கி, |
|