பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்783

 

அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், ‘சனகன்
                            பாவை
கற்பினால்இயன்றது’ என்பான், பெரியது ஓர்
                            களிப்பன் ஆனான்.

     அற்பின் நார்அறாத சிந்தை அனுமனும் - (சீதாராமர்கள்பக்கல்)
தான் கொண்டுள்ள பக்தியாகிய பற்று நீங்காத மனத்தை உடைய அனுமனும்;
வெம் தீ -
அந்தக் கொடிய நெருப்பு; வெற்பினால் இயன்றது அன்ன
மேனியை விழுங்கி நிற்பினும் -
மலையால் அமைக்கப்பட்டது போன்ற
தனது உடலை முழுவதும் கவர்ந்து நின்று எரித்தாலும்; சுடாது நின்ற
நீர்மையை நினைவின் நோக்கி -
தன்னைச் சுடாது குளிர்ச்சியோடு
விளங்கிய தன்மையை தன் மனத்தால் நன்கு ஆராய்ந்து உணர்ந்து; சனகன்
பாவை கற்பினால் இயன்றது -
‘சனகனின் மகளாகிய சானகியின் கற்பின்
சிறப்பால் ஆனது (இது)’; என்பான் - என்று தீர்மானித்தவனாகி; பெரியது
ஓர் களிப்பன் ஆனான் -
ஒப்பற்ற பெருங்களிப்பை உடையவன் ஆனான்.

     நெருப்பு தன்னைச்சுடாமல் இருப்பதற்குக் காரணம் பிராட்டியின் கற்புச்
சிறப்பே என்று உணர்ந்து அனுமன் மகிழ்ந்தனன் என்க.             (131)

அனுமன் இலங்கைநகர் முழுதும் காணுதல் 

5936.

அற்றை அவ்இரவில், தான் தன் அறிவினால்
                          முழுதும் உன்னப்
பெற்றிலன்எனினும், ஆண்டு, ஒன்று உள்ளது பிழை
                          உறாமே,
மற்று உறு பொறிமுன் செல்ல, மறைந்து செல்
                         அறிவு மான,
கற்றிலாஅரக்கர் தாமே காட்டலின், தெரிய,
                          கண்டான்.

     தான் - அந்த அனுமன்தான்;அற்றை அ இரவில் - பிராட்டியைக்
காண ஊர் தேடி வந்த அன்றைத் தினத்து முன்னிரவிலே; தன் அறிவினால்
முழுதும்
உன்ன பெற்றிலன்எனினும் - தன் அறிவைக் கொண்டுநகர்ப்
பகுதிகள்முழுவதையும் ஊன்றி அறியப் பெற்றிலனாயினும்; ஆண்டு உள்ளது
ஒன்றுபிழை