பக்கம் எண் :

784சுந்தர காண்டம்

உறாமே - அந்நகரத்தில் உள்ளஇடம் ஒன்றேனும், தவறாமல்; கற்றிலா
அரக்கர் தாமே காட்டலின் -
கற்றறிவில்லா (மூடர்களான) அந்த அரக்கர்கள்தாங்களே எல்லாவற்றையும் காட்டிக் கொண்டு சென்றதனால்;
மற்று உறுபொறி முன் செல்ல -
புறத் துறுப்பாய்ப் பொருந்திய பொறிகள்
(பொருள்களினிடத்து) முன்னே செல்ல; மறைந்து செல் அறிவுமான -
(அவற்றின் பின்னே) மறைவாகச் செல்கின்ற அறிவை ஒப்ப; தெரிய கண்டான்
-
நன்றாகப் பார்த்தான்.

     பிராட்டியைத்தேடி, இலங்கை நகரில் அன்றைய இரவில் அலைந்த
போது காணாத இடங்களை எல்லாம் இன்று அரக்கர் செயலால் அனுமன்
கண்டான் என்க. இதற்கு, பொறிகளின் வழி மன அறிவு புலன் வழிச் சென்று
யாவும் அறிதல் உவமையாக்கப்பட்டது.                          (132)

அனுமன் மேலெழஅரக்கர் தோள் அற்று விழுதல் 

5937.

முழுவதும் தெரிய நோக்கி, முற்றும் ஊர் முடிவில்
                                 சென்றான்,
‘வழு உறு காலம்ஈது’ என்று எண்ணினன், வலிதின்
                                 பற்றித்
தழுவினன், இரண்டுநூறாயிரம் புயத் தடக் கை
                                 தாம்போடு
எழு என நால,விண்மேல் எழுந்தனன்; விழுந்த
                                 எல்லாம்.

     முழுவதும் தெரியநோக்கி - அந்த இலங்கை நகர்முழுவதையும்
நன்றாகப் பார்த்துக் கொண்டே; ஊர் முற்றும் முடிவில் சென்றான் - நகர்
முழுவதும் சுற்றிக் கடை எல்லையில் சென்றவனான அனுமான்; வழு உறு
காலம் ஈது என்று எண்ணினன் -
தப்பிப் போதற்குரிய சமயம் இதுதான்
என்று எண்ணி,; வலிதின் பற்றி தழுவினன் - (இரு புறத்துக் கயிறுகளையும்)
வலியப் பிடித்து, (இரு புறத்து விலாவிலும் சேர) இடுக்கிக் கொண்டு; இரு
நூறாயிரம் புயம் தடம் கை தாம் போடு எழு என நால -
இரண்டு
இலட்சம் தோள்களும் பெரிய கைகளும் இரு புறத்துக் கயிற்றுடனே தூண்
போலத் தொங்கும்படி; விண் மேல் எழுந்தனன் - வானின் மேல் உயர்
எழும்பினான்; எல்லாம் விழுந்த - அவ்வரக்கர் கூட்டம் எல்லாம் கீழே
விழுந்தன.