முழங்குகின்றமுழக்கமும்; மூரிநீர் முழக்கொடு - கடலின் முழக்கத்துக்குச் சமமாக; முழங்கும் - ஒலிக்கும்; கொழும் குழல் - வளமான புல்லாங்குழல்போல; புதுக்குதலையர் - புதுமையாக மழலைமொழி பேசும் மகளிர் அணிந்த; நூபுரக் குரலின் - சிலம்பின் ஓசையினாலே; பேர் வழங்கும் - பெருமை தருகின்ற; அரும் சதிகளும் - அருமையான தாள ஒத்துக்கள்கூட; வயின்தொறும் - இடங்கள் தோறும்; மறையும் - ஒடுங்கிப் போகும். (13) | 4848. | மரகதத்தினும் மற்றுஉள மணியினும் வனைந்த குரக தத்தடந்தேரினம் அவைபயில் கொட்டில் இரவி வெள்கநின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் நகரம் ஒக்குமால்நல்நெடுந் துறக்கம், இந்நகர்க்கு. |
மரகதத்தினும் -மரகதக்கற்களாலும்; மற்றுள - வேறுவகையாக உள்ள; மணியினும் - மாணிக்கங்களாலும்; வனைந்த - அமைக்கப்பட்ட; குரகதத் தடந்தேர் இனம் - குதிரைகளால் இயங்கும் தேர்க்கூட்டமாகிய; அவைபயில் - அவைகள் தங்கியிருக்கும் தேர்ச்சாலைகள்; இரவி - சூரியனும்; வெள்க நின்று - நாணம் அடையும்படி இருந்து; இமைக்கின்ற இயற்கைய - ஒளிவீசும் தன்மையுடையன; என்றால் - என்று கூறப்பெறுமானால்; இந்நகர்க்கு - இந்த இலங்கைக்கு (ஒப்புக்கூறின்); நல்நெடும் துறக்கம் - நல்லபெரிய சுவர்க்கம்; நரகம் ஒக்கும் - நரகமே போன்றிருக்கும். இமைத்தல் - ஒளி வீசுதல் (14) | 4849. | திருகுவெஞ்சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார்; அருகு போகின்ற திங்களும் மறுஅற்றது;-அழகைப் பருகும் இந்நகர்த் துன்ஒளி பாய்தலின்;- பசும்பொன் உருகுகின்றதுபோன்று உளது; உலகுசூழ் உவரி. |
அழகைப் பருகும் -உலகஅழகையெல்லாம் தன்பால் அடக்கும்; இந்நகர் - இந்த இலங்கையில்; துன்ஒளி - நிரம்பிய ஒளியானது; பாய்தலின் - (எங்கும்) பரவுதலாலே; திருகும் - மாறுபட்ட; வெஞ்சினத்து அரக்கரும் - கொடுங்கோபத்தை |