பக்கம் எண் :

794சுந்தர காண்டம்

 

வெடித்த; வேலை வெதும்பிட, மீன் குலம்
துடித்து, வெந்து,புலர்ந்து, உயிர் சோர்ந்தவால்.

     பொடித்து எழுந்துபோவன பெரும் பொறி - (நெருப்பினின்றும்)
சிதறி எழுந்து போவனவாகிய பெரிய தீப்பொறிகள்; இடி குலங்களின்
எங்கணும் வீழ்தலின் -
இடிக்கூட்டம் போல எல்லா இடங்களிலும் வீழ்ந்த
அளவில்; வெடித்த வேலை - வெடி ஓசை போன்ற ஓசையை உடைய கடல்,;
வெதும்பிட மீன் குலம் துடித்து - கொதிப்படைய அக்கடலில் உள்ள மீன்
கூட்டங்கள் (வெப்பம் தாங்காமல்) துடித்து; வெந்து, புலர்ந்து உயிர்
சோர்ந்த-
தாபமடைந்து வாடி, உயிர் ஒடுங்கி இறந்தன.

     நெருப்புப்பொறிகள் எல்லா இடங்களிலும்விழுந்ததனால், கடல்
கொதித்தது; அதனால், அங்கிருந்த மீன்குலம் வெப்பம் தாங்காமல்,
துடிப்புண்டும் வெந்தும் காய்ந்தும் இறந்தன என்பதாம்.               (10)

5953.

பருகு தீமடுத்து, உள்ளுறப் பற்றலால்,
அருகு நீடிய ஆடகத்தாரைகள்
உருகி, வேலையின்ஊடு புக்கு உற்றன,
திருகு பொன்நெடுந் தண்டின் திரண்டவால்.

     பருகு தீ -(தன்னிடம் கிடைப்பன யாவற்றையும்) பருகும் (அழிக்கும்)
இயல்பினை உடைய நெருப்பு; மடுத்து - சூழ்ந்து நிறைந்து; உள் உற
பற்றலால் -
(பொன் மாளிகைகளின்) உள்ளே புகுந்து எரித்தலால்; உருகி
அருகு நீடிய ஆடக தாரைகள் -
உருகிப் பக்கங்களில் பெருகிய பொன்னின்
ஒழுக்குகள்; வேலையின் ஊடுபுக்கு உற்றன - கடலின் அகத்தே
புகுந்தவைகளாய்; திருகு பொன் நெடும் தண்டின் திரண்ட - முறுக்குகள்
அமைந்த நீண்ட பொற்பாளங்களாக இறுகின.

     நெருப்பு, மடுத்துபொன்மாளிகையில் புகுந்து எரித்ததால், பொன்
ஒழுக்கு, கடலின் நீரில் சேர்ந்து, மறுபடியும் இறுகி பாளங்களாக மாறிற்று.
நெருப்பு சூட்டில் உருகிய பொன், தண்ணீரின் குளிர்ச்சியில் இறுகிற்று. தண்டு
- கட்டிப்பட்ட பாளம்; திரள்தல். இறுகுதல்.                        (11)

5954.

உரையின்முந்து உலகு உண்ணும் எரிஅதால்,
வரை நிவந்தனபல் மணி மாளிகை
நிரையும் நீள்நெடுஞ் சோலையும் நிற்குமோ ?
தரையும் வெந்தது,பொன் எனும் தன்மையால்.