உரையின்முந்து உலகு உண்ணும் எரி அதால் - (சான்றோர்) சுடுமொழியினும் விரைவாக உலகை அழிக்கக் கூடிய நெருப்பானமையால்; வரை நிவந்தன பல் மணி மாளிகை நிரையும் - மலை போல் உயர்ந்த பல மணிகளால் இயன்ற மாளிகைகளின் வரிசைகளோடும்; நீள் நெடும் சோலையும் - நீண்டுயர்ந்த சோலைகளோடும்; நிற்குமோ - எரிந்து நிற்குமோ? (நில்லாது); பொன் எனும் தன்மையால் தரையும் வெந்தது - (அவைநின்ற) நிலமும் பொன் மயமாக இருத்தலினால் வெந்து உருகிவிட்டது. இலங்காபுரியிலுள்ள மாளிகையின் தளவரிசைகள் பொன்மயமானதால், சோலைகள் எரியும் போதே, தரையும் வெந்து அழிந்தது. (12) | 5955. | கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால் எல்லி பெற்றது,இமையவர் நாடு; இயல் வல்லி கோலிநிவந்தன; மா மணிச் சில்லியோடும் திரண்டன, தேர் எலாம்.+ |
கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால் - கல்லைக்காட்டிலும் செறிவுள்ளதான புகைத் தொகுதி பரவிச் சூழ்தலால்; இயல்வல்லி கோலி நிவந்தன இமையவர் நாடு - அழகிய கற்பகக் கொடி போன்ற கொடிகள் சுற்றி உயர்ந்த பொன்மயமான தேவலோகம்; எல்லி பெற்றது - இருள் அடைந்தது; தேரெலாம் மாமணி சில்லியோடும் திரண்டன - தேர்கள் எல்லாம் சிறந்த இரத்தினங்களால் இழைக்கப் பெற்ற தம் உருளைகளோடும் (அத்தீயால் ஒன்றாகச் சேர்ந்து உருகி) ஒரே தொகுதியாக அமைந்தன. தேர்கள்பொன்னால் அமைந்தமையால், தீயில் உருகி அவை உறுப்பு வேறுபாடின்றி ஒன்றாகத் திரண்டன என்க. (13) | 5956. | பேயமன்றினில் நின்று, பிறங்கு எரி, மாயர் உண்ட நறவுமடுத்ததால்; தூயர் என்றிலர்வைகு இடம் துன்னினால், தீயர்;அன்றியும், தீமையும் செய்வரால். |
பிறங்கு எரி பேயமன்றினில் நின்று - விளங்குகின்ற தீயானதுகள் முதலிய குடிக்கும் பொருள் பொருந்திய சாலையில் புகுந்து; மாயர் உண்ட நறவு மடுத்தது - வஞ்சனைத் தொழில் மிக்க அரக்கர் உண்டு எஞ்சிய கள்ளையும் குடித்தது; தூயர் என்றிலர் வைகு இடம் |