- இனிமேல் (கைம்மைநிலையில்) வீட்டைக் கடந்து வெளியில் செல்லமாட்டோம்; எனா - என்று உறுதி எடுத்துக் கொண்டு; நல் கடன் இது வீடினார் - இதுவே நல்ல கடப்பாடு ஆகும் என்று துணிந்து (அந்த நெருப்பிலே விழுந்து) இறந்தார்கள். சில உத்தமப்பெண்களின் இயல்பு கூறப்பட்டது. (18) | 5961. | பூக்கரிந்து, முறி பொறி ஆய், அடை நாக் கரிந்து,சினை நறுஞ் சாம்பர் ஆய், மீக் கரிந்துநெடும் பணை, வேர் உறக் காக் கரிந்து,கருங் கரி ஆனவே. |
பூ கரிந்து -மலர்கள்கரிந்து போய்; முறி பொறி ஆய் - இளந் தளிர்கள் நெருப்புப் பொறியாய்; அடை நாகரிந்து - இலைகளும், இலைகளின் நடுவில் உள்ள ஈர்க்குகளும் கரியாகி; சினை நறுஞ் சாம்பர் ஆய் மீகரிந்து - சிறு கிளைகள் நல்ல சாம்பலாய் வெந்து அதன் மேலுள்ள மற்றப் பாகங்களும் வெந்து; நெடும் பணை வேர் உற கா கரிந்து - நீண்ட கிளைகளும், வேர்களும் ஒன்றுபட சோலைகள் முழுவதும் கரிந்து போய்; கரும் கரி ஆன - பெரிய கரிக்குவியல்களாக ஆயின. முறி - இளந்தளிர்; அடை - இலை; நா இலையின் நடுவில் உள்ள ஈர்க்கு; சினை - சிறுகிளை; நெடும்பணை - பெரிய கிளை; கா - சோலை. (19) | 5962. | கார் முழுக்க எழும் கனல் கற்றை போய் ஊர் முழுக்கவெதுப்ப உருகின; சோர் ஒழுக்கம்அறாமையின், துன்று பொன் வேர் விடுப்பதுபோன்றன, விண் எலாம்.* |
கார் முழுக்கஎழும் கனல் கற்றை - மேகங்களை முழுகச்செய்யும் படிமேலே எழுகின்ற நெருப்பின் தொகுதி; போய் ஊர் முழுக்க வெதுப்ப -மேற் சென்று, (பொன்மயமான) அமராவதி நகரம் முழுவதையும் சுட்டெரிக்க;உருகின சோர் பொன் ஒழுக்கம் அறாமையின் - (அதனால்) உருகிஒழுகுகின்ற பொன்னின் தாரைகள் இடைவிடாது பெருகுதலால்; விண் எலாம்துன்று வேர் விடுப்பது போன்றன - அவ்வான நாடு முழுவதும், அடர்ந்தமரத்தின் வேரைக் கீழே இறங்க விடுவது போன்று விளங்கின. |