மேகங்கள்முழுகும்படி எழுந்த தீச்சுடர், பொன் மயமான அமராவதி நகரை எரிக்க, அது உருகியது. உருகிய பொன் ஒழுக்கு, மரத்தின் வேர்கள் போன்று விளங்கிற்று என்பதாம். (20) | 5963. | நெருக்கி மீ மிசை ஓங்கு நெருப்பு அழல் செருக்கும் வெண்கதிர்த் திங்களைச் சென்று உற உருக்க,மெய்யின் அமுதம் உகுத்தலால், அரக்கரும் சிலர்ஆவி பெற்றார் அரோ.* |
மீமிசை நெருக்கிஓங்கும் நெருப்பு அழல் - மேன்மேலும் திண்ணியதாக ஓங்கிய நெருப்பின் வெம்மை; செருக்கும் வெண் கதிர் திங்களை - களிப்பைத் தரும் வெண்மையான கிரணங்களை உடைய சந்திரனை; சென்று உற உருக்க - சென்று அடைந்து நன்றாக உருகச் செய்ய, (அதனால்); மெய்யின் அமுதம் - அச்சந்திரனின் உடலிலிருந்து; உகுத்தலால் - அமிர்தம் சிந்துவதால்; அரக்கர் சிலரும் - இறந்த அரக்கரில் சில பேரும்; ஆவி பெற்றார் - உயிர் பெற்றார்கள். நெருப்பு, சந்திரமண்டலம் சென்று தாக்கியதனால், உருகிய அமிர்தத்துளி பட்டு, நெருப்பில் வெந்து இறந்த அரக்கர்களில் சிலரும் உயிர் பெற்று எழுந்தனர் என்பதாம். (21) | 5964. | பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல், கருகி முற்றும்எரிந்து, எழு கார் மழை, அருகு சுற்றும்இருந்தையதாய், அதின் உருகுபொன்-திரள் ஒத்தனன், ஒண் கதிர்.* |
பருதி பற்றிநிமிர்ந்து எழு பைங்கனல் - சூரிய மண்டலத்தை அளாவிஉயர்ந்து எழுந்த அந்தப் புதிய நெருப்பின் வெம்மையால்; எழு கார் மழைமுற்றும் எரிந்து கருகி - வானத்தில் செல்லுகின்ற காள மேகங்கள் முழுவதும்வெந்து கருகி; அருகு சுற்றும் இருந்தை அது ஆய் - பக்கங்களில்சூழ்ந்திருந்த கரியைப் போல விளங்க; ஒள் கதிர் அதின் உருகு பொன்திரள் ஒத்தன - ஒளி தங்கிய சூரியன், அக்கரித்தொகுதியினிடையே உருகுகின்ற பொற் கட்டியைப் போலத் தோன்றினான். சூரியனிடத்துஉள்ள நெருப்பினும் வேறுபட்டது அனுமன் இலங்கையில் இட்ட நெருப்பு. அதனால் ‘பைங்கனல்’ எனப்பட்டது, சென்ற பாடலும், இதுவும் சந்திரன் இருப்பதையும் சூரியன் தோற்றத் |