பக்கம் எண் :

800சுந்தர காண்டம்

தையும் கூறுகின்றன.அதனால் இந்தக் காலம் பௌர்ணமி என்று அறியலாம்.
அனுமன் சீதாபிராட்டியைப் பார்த்த காலத்தை ஆராய்வதற்கு உதவும்
கவிதைகள் இவை இரண்டும் என்னலாம். இருந்தை - கரி.            (22)

5965.

தளைகொளுத்திய தாவு எரி, தாமணி
முளை கொளுத்தி,முகத்திடை மொய்த்த பேர்
உளை கொளுத்த,உலந்து உலைவு உற்றன-
வளை குளப்பின் மணி நிற வாசியே.

     தளை கொளுத்தியதாவு எரி - (குதிரைகளின்)பின்கால்களைப்
பிணைத்திருக்கும் கயிறுகளை எரித்த மேலே தாவி எழும்பிய தீயானது;
தாமணி முளை கொளுத்தி - தாமணி என்னும் கழுத்துக் கயிற்றுடன்,
அக்கயிறு கட்டப்பட்டிருந்த  முளைகளையும் எரித்து; முகத்திடை மொய்த்த
பேர் உளை கொளுத்த -
முகத்தின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த
பெரியபுற மயிர்கள் கொளுத்தப்பட்டு எரிய, (அதனால்); வளைகுளப்பின்
மணி நிற வாசி -
வளைந்த குளம்பையும் அழகிய நிறத்தையும் உடைய
குதிரைகள்; உலந்து உலைவு உற்றன - வாடித்தவித்து அழிந்தன.

     தளை - விலங்குபோல் காலில் பூட்டப்படும் கயிறு; தாமணி - கழுத்தில்
கட்டும் கயி்று; வளைகுளப்பு - வளைந்த கால் குளம்பு; வாசி - குதிரை.
குளம்பு என்பது குளப்பு என வலித்தல் விகாரமாக வந்தது.           (23)

அரக்கரும்அரக்கியரும் உற்ற அவலம்

5966.

எழுந்துபொன்தலத்து ஏறலின், நீள் புகைக்
கொழுந்து சுற்ற,உயிர்ப்பு இலர், கோளும் உற்று
அழுந்துபட்டுளர்ஒத்து, அயர்ந்து, ஆர் அழல்
விழுந்துமுற்றினர்-கூற்றை விழுங்குவார்.

     கூற்றைவிழுங்குவார் - யமனையும் விழுங்கக்கூடியஆற்றல்
அமைந்தசில அரக்கர்கள்; எழுந்து பொன் தலத்து ஏறலின் - (அந்த
நெருப்புக்குத்தப்பிப் பிழைக்க மேலே) எழுந்து பொன்னுலகமான
சுவர்க்கத்துக்கு ஏறும்போது; நீள் புகை கொழுந்து சுற்ற - கொழுந்துவி்ட்டு
எழுந்த நீண்ட புகைசுற்றிக் கொண்டதனால்; உயிர்ப்பு இலர் - மூச்சுவிட
மாட்டாதவர்களாய்;கோளும் உற்று - அப் புகையையும் உள்ளே கொண்டு
விட்டபடியால்;அழுந்து