பட்டுளர் ஒத்துஅயர்ந்து - நீருள்அழுந்தியவர்களைப் போல மயக்கமுற்றவர்களாகி; ஆர் அழல் விழுந்து முற்றினர் - நீங்குதற்கு அருமையான நெருப்பில் விழுந்து இறந்தனர். அரக்கர்கள்,மேலே எழ முயன்றும், முடியாமல், புகையால் சூழப்பெற்று, அதில் அழுந்தி மயக்கம் அடைந்து, அந்நெருப்பிலேயே விழுந்து இறந்தனர் என்பதாம். தலம் - இடம்; உயி்ர்ப்பு - மூச்சுவிடுதல்; முற்றினர் - முடிந்தார்கள். (24) | 5967. | கோசிகத்துகில் உற்ற கொழுங் கனல் தூசின்உத்தரிகத்தொடு சுற்றுறா, வாச மைக் குழல்பற்ற மயங்கினார்- பாசிழைப்பரவைப் படர் அல்குலார். |
பாசு இழை பரவைபடர் அல்குலார் - பசிய பொன்னாபரணங்களையும் கடல் போலப் பரந்த அல்குலையும் உடையவரான அரக்கமகளிர்கள்; கோசிகம் துகில் உற்ற கொழும் கனல் - அவர்கள் இடையில் உடுத்திய கோசிகம் என்னும் பட்டாடையில் பற்றிய வலி மிகுந்த நெருப்பு; உத்தரிக தூசின் ஓடும் சுற்று உறா - மேலாடையுடனே சூழ்ந்து பற்றிக் கொண்டு; வாசம் மை குழல் பற்ற - நறுமணம் மிகுந்த கரு நிறமான கூந்தலில் பற்றிக்கொள்ளவும்; மயங்கினார் - என்ன செய்வது என்று அறியாது திகைத்து அழிந்தார்கள். சில அரக்கியர்,அரையாடை நெருப்பினால் சூழப் பெற்று, மேலாடையிலும் பரவிக் கூந்தலிலும் பற்றவே, திகைத்து மயங்கினர் என்பதாம். கோசிகம் - ஒரு வகைப் பட்டு; இது அரையாடை; உத்தரிகம் - மேலாடை; தூசு - பஞ்சினால் ஆகிய ஆடை. (25) கலிநிலைத்துறை | 5968. | நிலவுஇலங்கிய துகிலினை நெருப்பு உண, நிருதர், இலவினும் சிலமுத்து உள எனும் நகை இளையார், புலவியின் கரைகண்டவர், அழுது உகப் புணரும் கலவியின் கரைகண்டிலர், மண்டினர் கடல்மேல். |
புலவியின் கரைகண்டவர் நிருதர் - ஊடலின் முடிவெல்லையைக் கண்டவர்களாகிய அரக்கர்களும்; இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் - இலவம்பூவின் இதழிலும், |