பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்801

பட்டுளர் ஒத்துஅயர்ந்து - நீருள்அழுந்தியவர்களைப் போல
மயக்கமுற்றவர்களாகி; ஆர் அழல் விழுந்து முற்றினர் - நீங்குதற்கு
அருமையான நெருப்பில் விழுந்து இறந்தனர்.

     அரக்கர்கள்,மேலே எழ முயன்றும், முடியாமல், புகையால் சூழப்பெற்று,
அதில் அழுந்தி மயக்கம் அடைந்து, அந்நெருப்பிலேயே விழுந்து இறந்தனர்
என்பதாம். தலம் - இடம்; உயி்ர்ப்பு - மூச்சுவிடுதல்; முற்றினர் - முடிந்தார்கள்.
                                                          (24)

5967.

கோசிகத்துகில் உற்ற கொழுங் கனல்
தூசின்உத்தரிகத்தொடு சுற்றுறா,
வாச மைக் குழல்பற்ற மயங்கினார்-
பாசிழைப்பரவைப் படர் அல்குலார்.

     பாசு இழை பரவைபடர் அல்குலார் - பசிய
பொன்னாபரணங்களையும் கடல் போலப் பரந்த அல்குலையும் உடையவரான
அரக்கமகளிர்கள்; கோசிகம் துகில் உற்ற கொழும் கனல் - அவர்கள்
இடையில் உடுத்திய கோசிகம் என்னும் பட்டாடையில் பற்றிய வலி மிகுந்த
நெருப்பு; உத்தரிக தூசின் ஓடும் சுற்று உறா - மேலாடையுடனே சூழ்ந்து
பற்றிக் கொண்டு; வாசம் மை குழல் பற்ற - நறுமணம் மிகுந்த கரு நிறமான
கூந்தலில் பற்றிக்கொள்ளவும்; மயங்கினார் - என்ன செய்வது என்று
அறியாது திகைத்து அழிந்தார்கள்.

     சில அரக்கியர்,அரையாடை நெருப்பினால் சூழப் பெற்று,
மேலாடையிலும் பரவிக் கூந்தலிலும் பற்றவே, திகைத்து மயங்கினர் என்பதாம்.
கோசிகம் - ஒரு வகைப் பட்டு; இது அரையாடை; உத்தரிகம் - மேலாடை;
தூசு - பஞ்சினால் ஆகிய ஆடை.                            (25)

கலிநிலைத்துறை

5968.

நிலவுஇலங்கிய துகிலினை நெருப்பு உண, நிருதர்,
இலவினும் சிலமுத்து உள எனும் நகை இளையார்,
புலவியின் கரைகண்டவர், அழுது உகப் புணரும்
கலவியின் கரைகண்டிலர், மண்டினர் கடல்மேல்.

     புலவியின் கரைகண்டவர் நிருதர் - ஊடலின் முடிவெல்லையைக்
கண்டவர்களாகிய அரக்கர்களும்; இலவினும் சில முத்து உள எனும் நகை
இளையார் -
இலவம்பூவின் இதழிலும்,