அழுதனர். சோகத்தைத்தணித்துக் கொள்ள, தமது கணவன்மார்களைத் தொடர்ந்து சென்று தழுவிக்கொள்ள ஓடினர்; அதற்குள் புகை மிகுந்தமையால் அதில் மறைந்தனர். இக்காட்சி, மின்னல் மேகத்தில் மறைந்ததது போன்றிருந்தது. (27) | 5970. | வரையினைப்புரை மாடங்கள் எரி புக, மகளிர், புரை இல் பொன்கலன் வில்லிட விசும்பிடைப் போவார், கரை இல் நுண்புகைப் படலையில் கரந்தனர்; கலிங்கத் திரையினுள்பொலி சித்திரப் பாவையின் செயலார். |
வரையினை புரைமாடங்கள் எரி புக - மலையை ஒத்த மிகப் பெரியமாளிகைகளில் நெருப்புப் பற்றிக் கொள்ள; மகளிர் - அங்கிருந்த அரக்கமாதர்கள்; புரை இல் பொன் கலன் வில்லிட - குற்றமற்ற அழகிய பொன்மயமான தமது ஆபரணங்கள் ஒளி வீச; விசும்பிடை போவார் - வானத்தில் எழுந்து சென்றவர்களாய்; கரை இல் நுண் புகை படலையில் கரந்தனர் - அளவு இல்லாத நுண்ணிய புகையின் திரளிலே மறைந்தார்கள்; (அதனால், அவர்கள்) கலிங்கம் திரையினுள் பொலி சித்திரம் பாவையின் செயலார் - கலிங்க நாட்டில் நெய்த துணித் திரையின் உள்ளே விளங்குகின்ற அழகிய பதுமையின் செயலை அடைந்தவர்களாயினர். நுண்புகைத்தொகுதிக்கு, கலிங்கத்திரையும், அழகிய மகளிர்க்கு சித்திரப் பதுமையும் உவமைகள். கலிங்கத்திரை - கலிங்க நாட்டுத் துணியால் ஆன திரைச் சேலை. பாவை - பெண் போன்ற ஓவியம். (28) நந்தன வனங்கள்முதலியன வெந்தொழிந்த காட்சி | 5971. | அகருவும் நறுஞ் சாந்தமும் முதலிய, அனேகம் புகல் இல் நல் மரத்து உறு வெறி, உலகு எலாம் போர்ப்ப, பகரும் ஊழியில் கால வெங் கடுங் கனல் பருகும் மகர வேலையின், வெந்தன-நந்தனவனங்கள். |
பகரும் ஊழியில்- நூல்களில் கூறப்படுவதான யுக முடிவுக் காலத்தில்; காலம் வெம் கடும் கனல் பருகும் மகர வேலையின் - மிகக் கொடிய காலாக்கினி உறிஞ்சி வற்றச் செய்யும் மகரம் |