பக்கம் எண் :

804சுந்தர காண்டம்

முதலிய மீன்கள் வாழும்கடல்கள் (அழிந்தன) போல; அகருவும் நறும்
சாந்தமும் முதலிய அனேகம் புகர் இல் நல் மரத்து உறு வெறி -
அகில்
மரங்களும், நறுமணம் உள்ள சந்தனமரங்களும் முதலான குற்றம் அற்ற சிறந்த
பல மரங்களில் பொருந்திய நறுமணம்; உலகு எலாம் போர்ப்ப - உலகம்
முழுவதும் வீசிக் கவிந்து கொள்ளுமாறு; நந்தன வனங்கள் - இலங்கையில்
இருந்த சிங்காரத் தோட்டங்கள்; வெந்தன - அத்தீயில் வெந்து அழிந்தன.

     கால முடிவில்,காலக் கொடுந்தீயால், கடல் நீர் வற்றி அழிவது போல,
அனுமன் வைத்த தீயால், இலங்கை நகரத்துப் பூந்தோட்டங்கள் அழிந்தன
என்பதாம். அகர் - அகில்; புகர் - குற்றம்; வெறி - மணம்; போர்ப்ப - மூட..
                                                          (29)

5972.

மினைப்பரந்து எழு கொழுஞ் சுடர் உலகு எலாம்
                            விழுங்கி,
நினைவு அரும்பெருந் திசை உற விரிகின்ற
                            நிலையால்,
சினைப்பரந்து எரி சேர்ந்திலா நின்றவும், சில வெங்
கனல் பரந்தவும்,தெரிகில-கற்பகக் கானம்.

     மினை பரந்து எழுகொழும் சுடர் - மின்னலைப் போல ஒளிபரவி
எழும் செழுமையான அனல் கொழுந்து; உலகு எலாம் விழுங்கி - உலகம்
முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டு; நினைப்பு அரும் பெரும் திசை
உற -
நினைப்பதற்கு அரிய பெரிய திசைகளைப் போய் அடைய; விரிகின்ற
நிலையால் -
பரந்து விளங்கும் தன்மையால்; கற்பகம் கானம் வெங்கனல்
பரந்த சிலவும் -
கற்பகச் சோலைகள் கொடிய நெருப்புப் பற்றி எரிகின்றவை
இவை சில என்றும்; சினை பரந்து எரி சேர்ந்திலா நின்ற சிலவும் -
கிளைகளில் தாவி நெருப்புப் பற்றாது நின்றவை இவை சில என்றும்; தெரிகில
-
வேறுபாடு அறிய வொண்ணாதனவாயிருந்தன.

     இலங்கையில் இருந்தகற்பகச் சோலைகள் இயற்கையில்
ஒளியுடைமையால்அனுமன் இட்ட தீயால் எரிந்தவை இவை என்றும்
எரியாதவை இவை என்றும்அறிந்து கொள்ள முடியாதபடி விளங்கின
என்பதாம். போந்து - போல;சினைப் பரந்து- கிளைகளில்
தாவி.                                                   (30)