பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்805

5973.

மூளும் வெம்புகை விழுங்கலின், சுற்றுற முழு நீர்
மாளும் வண்ணம்,மா மலை நெடுந் தலைதொறும்
                                  மயங்கிப்
பூளை வீய்ந்தன்னபோவன, புணரியில் புனல் மீன்
மீள, யாவையும்தெரிந்தில, முகில் கணம் விசைப்ப.+

     புணரியின் புனல்மீன் யாவையும் மீள - கடல் நீரினிடத்துள்ள
மீனினம் யாவையும் இல்லையாகும்படி; மூளும் வெம்புகை - மூண்டெழுந்த
வெவ்விய நெருப்புப் புகை; சுற்று உற முழு நீர் மாளும் வண்ணம்
விழுங்கலின் -
சுற்றியுள்ள நீர் முழுவதையும் குடித்துவிட்டமையால்;
தெரிந்தில முகில் கணம் விசைப்ப - இது தெரியாத மேகக் கூட்டங்கள் நீர்
முகக்க விரைந்து செல்வனவாய்; மாமலை நெடும் தலை தொறும் மயங்கி -
பெரிய மலைகளின் உயர்ந்த இடங்களில் எல்லாம் மோதுண்டு; பூனை
வீய்ந்தன்ன போவன -
பூளைப் பூ சிதறுவது போல சிதறிப் போயின.

    புகை, கடலில்உள்ள மீனினம் மாயும்படி, நீர் முழுதையும்
குடித்துவிட்டது. வழக்கமாக நீர் முகக்க வரும் மேகங்கள், அது தெரியாமல்
சென்று, மலை உச்சியில் மோதுண்டு சிதறிப் போயின என்பதாம். மீள -
இல்லையாக.                                              (31)

5974.

மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளியங்கிரியும்,
ஒக்க,வெற்பினோடு; அன்னமும் காக்கையின் உருவ;
பக்க வேலையின்படியது, பாற்கடல்; முடிவில்
திக்கயங்களும்கயங்களும் வேற்றுமை தெரியா.

     மிக்க வெம் புகைவிழுங்கலின் - மிகுதியான கொடிய புகைஉலகம்
எங்கும் கவிழ்ந்து கொண்டமையால்; வெள்ளி அம் கிரியும் வெற்பினோடு
ஒக்க -
வெள்ளிய அழகிய கைலைமலையும் ஏனைய மலைகளைப் போலக்
கருநிறம் பெற்றது; அன்னமும் காக்கையின் உருவ - வெள்ளை அன்னமும்
காக்கையின் கருநிறத்ததாயிற்று; பாற்கடல் பக்க வேலையின் படியது -
வெண்மையான பாற்கடலும் அருகில் உள்ள கடலின் தன்மையாய்
கருங்கடலாயிற்று; முடிவில் திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா
-
எல்லைக் கோடியில் உள்ள ஐராவதம் முதலிய (வெண்ணிறமான)
திசையானைகளுக்கும் ஏனைய கருநிறயானைகளுக்கும் வேறுபாடு
தெரியாததாயிற்று.