புகை சூழ்ந்த பின்னர்,இயற்கையாக வெண்ணிறமாய் உள்ள சிறந்தவை அனைத்தும் கருநிறத்ததாயின என்பதாம். (32) கனலுக்குப் பயந்துகடலில் வீழ்தல் | 5975. | கரிந்துசிந்திடக் கடுங் கனல் தொடர்ந்து உடல் கதுவ, உரிந்தமெய்யினர், ஓடினர், நீரிடை ஒளிப்பார், விரிந்தகூந்தலும், குஞ்சியும் மிடைதலின், தாமும் எரிந்து வேகின்றஒத்தன, எறி திரைப் பரவை. |
கரிந்து சிந்திடகடுங்கனல் தொடர்ந்து உடல் கதுவ - கருகி உதிர்ந்து போகும்படி கொடிய நெருப்பு தொடர்ந்து அரக்கர்களது உடல்களைப் பற்றலும்; உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் - (அதனால்) தோல் உரியப் பெற்ற உடலினராய் ஓடிப் போய் (வெப்பம் தணிவதற்காக) கடல் நீரில் முழ்கி மறைந்து கொண்டவர்களாயினர்; விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் - (அரக்கரின் பெண்டிர் ஆடவர் என்ற இருபாலாரின்) விரிந்த தலைமயிரும் (அக்கடலில்) மிகுந்து நிறைந்தமையால்; எறி திரை பரவை தாமும் எரிந்து வேகின்ற ஒத்தன - வீசும் அலைகளை உடைய கடல்களும் தீப்பட்டு, வேகின்றவை போன்றன. அரக்கர்களின்தலைமயிர் செம்பட்டையாதலின், கடற்பரப்பில் அவை நெருங்கித் தோன்றியது. கடல் தீப்பற்றியது போல் காணப்பட்டது என்பது கற்பனை. (33) | 5976. | மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை அருங் கையால்பற்றி, மற்றொரு மகவு பின் அரற்ற, நெருங்கினாரொடுநெறி குழல் சுறுக் கொள நீங்கிக் கருங் கடல்தலைவீழ்ந்தனர், அரக்கியர் கதறி. |
மருங்கின் மேல்ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொரு சிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு பின்அரற்ற - வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர; அரக்கியர் -அரக்கிமார்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய சுற்றத்தினரோடு; நீங்கி -தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக் கொள - நெறித்த |