பக்கம் எண் :

ஊர் தேடு படலம்81

    தேனும்சாந்தமும் - தேனையும் சந்தனத்தையும்; செறிநறும் -
நறுமணம் செறிந்துள்ள;  மான்மதச் சேறும் - கஸ்தூரிக் குழம்பையும்; வான
நாள் -
வானிலுள்ள நட்சத்திரங்களைப்போல;  மலர் - மலர்ந்த;
கற்பகமலர்களும் -
கற்பகப் பூக்களையும்; வயமா - வெற்றி பெற்ற
யானைகளின்; தானவாரியும் - மதவெள்ளத்தையும்; நீரொடு மடுத்தலின் -
நதியின் நீருடன் உட்கொண்ட காரணத்தால்; அவ்வேலை - அக் கடலானது;
தழீஇய மீனும் -
தன்னைச் சார்ந்து வாழ்கின்ற மீன்களும்; தானும் -
(கடலாகிய) தானும்; ஓர் வெறிமணம் கமழும் - ஒப்பற்ற தெய்வமணம்
பெறும்.

     கடலானது, தேன்முதலாகிய பொருள்களை நதியில் நீருடன் மடுப்பதால்
மீனும் தானும் தெய்வமணம் பெற்றது. வெறி - தெய்வத்தன்மை - வெறியுறு
சிறப்பு (தொல் - பொருள்) நீர் என்றது நதியை. நீர்ப்பிணக்கு, நிலப்பிணக்கு
என்னும் தொடர் காண்க - (தனிச்சுலோகி - கிட்கிந்தா) நாள் - நட்சத்திரம்.
மலர் என்பது கற்பகத்தைச் சாராது மலரைச் சார்ந்தது, தழாத்தொடர்.   (17)

4852.

தெய்வத்தச்சனைப் புகழ்துமோ ? செங்கண்வாள்
                                    அரக்கன்
மெய்ஒத்துஆற்றிய தவத்தையே வியத்துமோ ?
                                    விரிஞ்சன்
ஐயப்பாடு இலாவரத்தையே மதித்துமோ ? அறியாத்
தொய்யல்சிந்தையேம், யாவரை யாதென்று துதிப்போம்.

    தெய்வத்தச்சனைப புகழ்துமோ ? - (இந் நகரை அமைத்த)
தேவசிற்பியைப் புகழ்வோமா..?; செங்கண்வாள் அரக்கன் - சிவந்த
கண்களையும் வாளையும் பெற்ற இராவணன்; மெய் ஒத்து - சத்தியத்துடன்
ஒன்றுபட்டு; ஆற்றிய - செய்த; தவத்தையே - தவம் ஒன்றையே;
வியத்துமோ -
மதிப்போமா?  விரிஞ்சன் - பிரம்மதேவன் (வழங்கியது);
ஐயப்பாடு இலா - சந்தேகத்துக்கு இடம் இல்லாத; வரத்தையே - வரத்தை
மட்டும்; மதித்துமோ - மதிப்போமா? அறியா - (ஒன்றைத் தேர்ந்து
புகழ்வதை) அறியாத; தொய்யல் சிந்தையேம் - தளர்ந்த மனத்தைப்
பெற்றயாம்; யாவரை - தச்சன், பிரம்மன் - இராவணன் என்னும் இவருள்
எவரை; யாதென்று - எவ்வாறு; துதிப்போம் - புகழ்வோம்.

     ‘யாவரை யாதுஎன்று துதிப்போம்’ என்னும் பாடம் நிரம்பவுள்ளது.
எவ்வகை துதிப்போம் என்னும் பாடம் சிறந்தது என்பது என் கருத்து. யாவரை
- யாது என்று அமைத்தால் திணை வழுவுள்ளது.                  (18)