பெரிய நிலைகளைஉடையதுமான அரண்மனை; புரை தீர் பொன் திருத்தியது ஆதலால் - குற்றமற்ற பொன்னால் அமைக்கப்பட்டதாதலால்; எரி நின்று, துற்றுபருகிட - நெருப்பு எழுந்து வாயினால் கவ்விக் குடிப்பது போல் எரிப்பதனால்; நெகிழ்வு உற உருகி - நெகிழ்ந்து உருகி, (ஒரே திரளாகி); தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த - தெற்குத்திக்கிலும் ஒரு மேரு மலை உள்ளது என்று சொல்லும்படி காணப்பட்டது. மேரு மலை வடதிசையில் உள்ளது என்பது புராணக் கொள்கை. இராவணன் மாளிகை மலை போல் உயர்ந்து பொன்னால் அமைக்கப்பட்டதால், அது நெருப்பில் உருகி ஒன்றாகத் திரண்டு, தென்திசை மேரு மலைபோல் தோன்றிற்று என்பதாம். (42) இராவணன்முதலியோர் வெளியேறுதல் | 5985. | அனையகாலையில் அரக்கனும், அரிவையர் குழுவும், புனை மணிப்பொலி புட்பக விமானத்துப் போனார்; நினையும்மாத்திரை யாவரும் நீங்கினர்; நினையும் வினை இலாமையின், வெந்தது, அவ் விலங்கல்மேல் இலங்கை. |
அனைய காலையில்- அவ்வாறுஇராவணன் மனை வேகின்ற அப்பொழுது; அரக்கனும், அரிவையர் குழுவும் - தலைமை அரக்கனாகிய இராவணனும், அவனது உரிமை மகளிர் கூட்டமும்; மணி புனை பொலி புட்பக விமானத்து போனார் - இரத்தினங்களால் அமைக்கப்பெற்று விளங்குகின்ற புட்பக விமானத்தில் ஏறி மேலே சென்றனர்; யாவரும் - இறந்தவர் போக மற்றைய அரக்கர்களும்; நினையும் மாத்திரை நீங்கினர் - நினைத்த அளவில் அவ்விடம் விட்டு அகன்றனர்; நினையும் வினை இலாமையின் - அவ்வாறு நினைக்கும் செயலைச் செய்யும் தன்மை தனக்கு இல்லாததால்; அவ்விலங்கல் மேல் இலங்கை வெந்தது - அந்த மலையின் மீது இருந்த இலங்கை நகர் வெந்து அழிந்தது. நினைத்ததைச்செய்யக் கூடியவர்கள் அரக்கர்கள். அஃறிணைப் பொருளாகிய இலங்கைநகர் அவ்வாறு செய்ய முடியாததால் நெருப்பில் வெந்து அழிந்தது என்பது கருத்து. நினையும் மாத்திரை - மிகச் சுருங்கிய காலம்; புட்பக விமானம் - இராவணனது வானவூர்தி. (43) |