தம் கிளைதிருவொடும் காணார் - (அவ்வாறு இராவணன் கேட்டதும்)தமது சுற்றத்தாரையும் வீரம் செல்வம் முதலிய பொலிவையும் இழந்து;இரங்குகின்ற வல் அரக்கர் - ஏங்கிக் கொண்டிருக்கின்ற வலிய அரக்கர்கள்;கரங்கள் கூப்பினர் ஈது இயம்பினர் - கைகளைக் கூப்பிக் கொண்டுபின்வரும் இச்செய்தியைச் சொன்னார்கள்; இறையோய் ! - அரசனே !;தரங்க வேலையின் நெடியதன் வால் இட்டதழலால் - அலைகளை உடையகடலினும் நீண்ட தனது வாலிலே நாம் வைத்த நெருப்பால்; குரங்கு சுட்டதுஈது என்றலும் - அக்குரங்கு எரித்தது இதுவாகும் என்று சொன்ன உடன்;இராவணன் கொதித்தான் - இராவணன் கோபம் கொண்டான். (45) 5988. | ‘இன்று புன்தொழில் குரங்குதன் வலியினால், இலங்கை நின்று வெந்து,மா நீறு எழுகின்றது; நெருப்புத் தின்றுதேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்; நன்று ! நன்று! போர் வலி’ என, இராவணன் நக்கான். |
இன்று - இன்றைக்கு; புன் தொழில் குரங்கு தன் வலியினால் - அற்பத் தொழிலை உடைய (ஒரு) குரங்கினது வலிமையினால்; இலங்கை நின்று வெந்து மாநீறு எழுகின்றது - இலங்கை நகர் நின்று எரிந்து பெருஞ் சாம்பல் பறக்கின்றதாயிற்று; நெருப்பு தின்று தேக்கிடுகின்றது - நெருப்பு நகரத்தை உண்டு ஏப்பம் விடுவதாயிற்று; தேவர் சிரிப்பார் - (இதனைக் கண்டால், நமக்குத் தோற்றுவலி இழந்த) தேவர்களும் நகைப்பார்கள்; போர் வலி நன்று நன்று என - தமது போர்த்திறமை மிக நன்றாக இருக்கிளது என்று சொல்லி; இராவணன் நக்கான் - இராவணன் (வெகுளி மேலீட்டால்) சிரித்தான். இலங்கைஎரியுண்டதற்கு, இராவணன் நாணம் தோன்ற, கோபத்தோடு நக்கான் என்க. தேக்கிடுதல் - நிறைந்து ஏப்பம் விடுதல். ‘தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான்’ என்ற திருவாய் மொழித் தொடர் (2.1.3) விளக்கத்துக்கு ‘செந்தீ உண்டு தேக்கிட்டதே’ என்று மேற்கோள் காட்டப்பெற்றுள்ளது. (46) |