எரியையும்அனுமனையும் பற்றி வர இராவணன் கட்டளை இடுதல் வஞ்சித் துறை 5989. | ‘உண்டநெருப்பைக் கண்டனர்பற்றிக் கொண்டு அணைக’என்றான்- அண்டரைவென்றான். |
அண்டரைவென்றான் - முன்பு தேவர்களைவென்றவனான இராவணன்; உண்ட நெருப்பை - இலங்கையை எரித்த அக்கினித்தேவனை; கண்டனர் பற்றி கொண்டு அணைக என்றான் - பார்த்தவர்கள் பிடித்துக் கொண்டு இங்கே வருவீர்களாக என்று ஆணையிட்டான். இராவணன் ஆணைக்குஅஞ்சியிருந்த அக்கினி தேவன், இப்போது, ஆணையை மீறிச் செயல்பட்டதனால், அவனைத் தண்டிக்க வேண்டி, பிடித்துக் கொண்டு வருமாறு அரக்கர்களுக்குக் கட்டளையிட்டான் என்பதாம். (47) 5990. | ‘உற்றுஅகலாமுன். செற்ற குரங்கைப் பற்றுமின்’என்றான்- முற்றும்முனிந்தான். |
முற்றும்முனிந்தான் - முழுவதும் சினந்தவனானஇராவணன்; செற்ற குரங்கை - இவ்வாறு தீங்கு இழைத்த குரங்கை; உற்று அகலாமுன் - அது, நம் ஊரைவிட்டு நீங்குவதற்கு முன்பாக; பற்றுமின் - பிடித்து வாருங்கள்; என்றான் - என்று கட்டளையிட்டான். (48) 5991. | சார் அயல்நின்றான், வீரர்விரைந்தார்; ‘நேருதும்’ என்றார்; தேரினர்சென்றார். |
சார் அயல்நின்றார் - இராவணனைச் சார்ந்துபக்கத்தில் நின்றவர்களாகிய; தேரினர் வீரர் நேருதும் என்றார் - தேர்வீரர்கள் |