பக்கம் எண் :

816சுந்தர காண்டம்

அவ்வாறே செய்வோம்என்று சொல்லி; விரைந்தார் - விரைந்து சென்றார்கள்.

      நேருதல் - உடன்படுதல்.                              (49)

5992.

எல்லைஇகந்தார்
வில்லர்;வெகுண்டார்
பல் அதிகாரத்
தொல்லர்,தொடர்ந்தார்.

     எல்லை இகந்தார்- அளவற்றவில் வீரர்களும்; வில்லர் -; பல்
அதிகார தொல்லர் -
பழமையான பல்வகையான அதிகாரங்களை
உடையவர்களும்; வெகுண்டார் - கோபங்கொண்டு; தொடர்ந்தார் - தேர்
வீரர்களைத் தொடர்ந்து சென்றார்கள்.                          (50)

வஞ்சி விருத்தம்

5993.

நீர் கெழுவேலை நிமிர்ந்தார்;
தார் கெழு தானைசமைந்தார்;-
போர் கெழு மாலைபுனைந்தார்
ஓர் எழுவீரர்-உயர்ந்தார்.

     உயர்ந்தார் ஓர்எழு வீரர் - (அவ்வீரர்களுள்)உயர்ந்தவர்களாகிய
ஒப்பற்ற ஏழுவீரர்கள்; நீர் கெழு வேலை நிமிர்ந்தார் - நீர்மிகும் கடல்
போல எழுந்தவர்களாய்; போர் கெழு மாலை புனைந்தார் - போர்க்குரிய
தும்பை மாலை அணிந்து; தார் கெழு தானை சமைந்தார் - அணிவகுக்கப்
பெற்ற சேனையை ஆயத்தம் செய்தார்கள்.                       (51)

5994.

விண்ணினை,வேலை விளிம்பு ஆர்
மண்ணினை, ஓடிவளைந்தார்;
அண்ணலை நாடிஅணைந்தார்;
கண்ணினின் வேறுஅயல் கண்டார்.

     விண்ணினை -வானத்தையும்;  வேலை விளிம்பு ஆர் மண்ணினை
-
கடலின் விளம்பிலே (ஓரத்திலே) பொருந்தியுள்ள இலங்கைப் பூமியையும்;
ஓடிவளைந்தார் -
ஓடிச் சென்று சூழ்ந்து