பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்817

கொண்டவர்களாய்;அண்ணலை நாடி அணைந்தார் - பெரியோனாகிய
அனுமனைத் தேடி நெருங்கி; அயல் வேறு கண்ணினின் கண்டார் - ஒரு
பக்கத்தில் (அனுமனை) தனியே (தமது) கண்களால் பார்த்தார்கள்.       (52)

அரக்கர்கள்அனுமனுடன் பொருது அழிதல் 

5995.

‘பற்றுதிர்! பற்றுதிர் !’ என்பார்;
‘எற்றுதிர் !எற்றுதிர் ! என்பார்;
முற்றினர்,முற்றும் முனிந்தார்;
கற்று உணர்மாருதி கண்டான்.

     முற்றும்முனிந்தார் - மிக்க கோபம் கொண்டஅந்த அரக்கர்கள்;
பற்றுதிர் பற்றுதிர் என்பார் -
(அனுமனைக் கண்டவுடன்) ‘இவனைப்
பிடித்துக் கொள்ளுங்கள் பிடியுங்கள்’ என்று சொல்பவரும்; எற்றுதிர் எற்றுதிர்
என்பார் -
‘இவனைத் தாக்குங்கள் தாக்குங்கள்’ என்று சொல்பவர்களுமாய்;
முற்றினர் -
அனுமனை வளைந்து கொண்டார்கள்; கற்று உணர் மாருதி
கண்டான் -
நூல்களைக் கற்று உணர்ந்த அறிஞனான அனுமன் அவர்களைப்
பார்த்தான்.                                                (53)

5996.

ஏல்கொடுவஞ்சர் எதிர்ந்தார்;
கால்கொடுகைகொடு, கார்போல்,
வேல்கொடுகோலினர்; வெந் தீ
வால்கொடு தானும்வளைந்தான்.

     ஏல் கொடுவஞ்சர் - (அனுமனைப்பிடிப்பதற்கு) ஏற்றுக் கொண்டு
வந்த வஞ்சகர்களான அரக்கர்கள்; கார் போல் கோலினர் - மேகம் போல்
அனுமனைச் சூழ்ந்து கொண்டு; கால் கொடு, கை கொடு வேல் கொடு -
காலைக் கொண்டும் கையைக் கொண்டும் வேலைக் கொண்டும்; எதிர்ந்தார்
தானும் -
எதிர்த்தார்கள்; அனுமனும்; வெம்தீ வால் கொடு வளைந்தான் -
வெவ்விய நெருப்பு மூண்ட தனது வாலைக் கொண்டு அவர்களை வளைத்தான்.
                         

     ஏல் கொடு -ஏற்றுக்கொண்டு.                           (54)

5997.

பாதவம்ஒன்று பகுத்தான்;
மாதிரம் வாலின்வளைத்தான்;