பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்829

 

‘சென்றது முதலா,வந்தது இறுதியாச் செப்பற்பாலை,
வன் திறல்உரவோய் !’ என்ன, சொல்லுவான்
                          மருத்தின் மைந்தன்:

     என்றலும் -என்று(அனுமன்) கூறியவுடன்; எழுந்தனர் - (வானர
வீரர்கள் அனைவரும்) எழுந்து நின்றவர்களாய்; கரங்கள் கூப்பி இறைஞ்சி
தாழ்ந்து நின்றனர் -
தம் கைகளைக் குவித்து, வணங்கித் தாழ்ந்துநின்று;
உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் -
மகிழ்ச்சி மேலிட
பூரிப்பால் நிமிர்ந்து (ஊக்கம் கொண்ட) மன முடையவர்களாய்; வல் திறல்
உரவோய் ! -
(அனுமனை நோக்கி) மிக்க வலிமை உடையவனே !; சென்றது
முதலா வந்தது இறுதியா செப்பல் பாலை என்ன -
நீ இங்கிருந்து போனது
முதலாக, இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தது முடிவாக, (நடந்ததை) இங்குச்
சொல்வாயாக என்று கேட்டுக் கொள்ள; மருத்தின் மைந்தன் சொல்லுவான்
-
வாயு தேவனின் மகனான அனுமன் (பின்வருமாறு) சொல்லுவானாயினான். 
                                                            (8)

6015.

ஆண்தகைதேவி உள்ளத்து அருந் தவம் அமையச்
                            சொல்லி,
பூண்ட பேர்அடையாளம் கைக் கொண்டதும் புகன்று,
                            போரில்
நீண்ட வாள்அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச்
                            சிந்தி
மீண்டதும்,விளம்பான்-தான் தன் வென்றியை
                            உரைப்ப வெள்கி.

     ஆண்தகை -ஆண்மைக்குணம் நிறைந்த அனுமன்; தேவி உள்ளத்து
அருந்தவம் -
பிராட்டியின் மனத்தில் உள்ள அரிய தவமாகிய
கற்பொழுக்கத்தை; அமைய சொல்லி - (அவர்களுக்கு விளங்கும்படித்)
தெளிவாகச் சொல்லி; பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும்
புகன்று -
(பிராட்டி) அணிந்திருந்த (சூடாமணியாகிய) பெரிய
அடையாளத்தைக் கையில் பெற்று வந்ததையும் சொல்லி; தன் வென்றியை
தான் உரைப்ப வெள்கி -
தனது வெற்றிச் சிறப்பைத் தானே சொல்ல
வெட்கப்பட்டு; போரில் நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் -
யுத்தத்தில் நெடிய வாள்களை உடைய அரக்கர்களுடன் நடந்த செய்தியையும்;
நெருப்பு சிந்தி மீண்டதும் -
(இலங்கை முழுவதிலும்)