மகாமேரு மலையானது; முழுமுற்றும் வெள்கி - (தன்னுடைய) உடல் முழுவதும் நாணத்தால் சுருங்கி; எங்ஙனம் விளர்க்குமோ - எப்படி வெளுத்துப் போகுமோ. வையம் -பிருதிவி (மண்) வழங்குதல் - கொண்டாடப்படுதல். ‘வழங்கு தாரவன்’ என்னும் தேவரின் தொடருக்கு நச்சர் உலகம் கொண்டாடப்படுதலின் வழங்குதாரவன் என்றார், என விளக்கினார். (சிந்-2504) அவற்றின் வளர்ச்சி வழக்கு வீழ்ந்தனவாகும் என்றும் கூறலாம். (20) | 4855. | முன்னம்யாவரும் ‘இராவணன் முனியும் என்று எண்ணி பொன்னின்மாநகர் மீச்செலான்கதிர்’ எனப் புகல்வார்- கன்னி ஆரையின்ஒளியினில் கண்வழுக்குறுதல் உன்னிநாள்தொறும் விலங்கினன் போதலை உணரார். |
முன்னம் -முன்பு; யாவரும் - எல்லாப் புலவர்களும்; கதிர் - (ஆயிரம்) கதிர்களையுடைய சூரியன்; இராவணன் - (அழப்பண்ணும்) இராவணன்; முனியும் என்று எண்ணி - கோபிப்பான் என்று பயந்து கொண்டு; பொன்னின் மாநகர் மீ - பொன்மயமான இலங்கைக்கு மேலே; செலான் - போக மாட்டான்; எனப்புகல்வர் - என்று கூறுவார்கள்; (அவர்கள்) கன்னி ஆரையின் - பிறரால் பற்றப்படாத மதில்களின்; ஒளியினில் - பிரகாசத்தாலே; கண் வழுக்குறுதல் உன்னி - கண் கூசுதலை நினைந்து (சூரியன்); நாள்தொறும் - தினந்தோறும்; விலங்கினன் போதலை - விலகிச் செல்வதை; உணரார் - அறியார். கதிர் -சூரியன். உணரார், புகல்வார் என்க. பிறரால் பற்றப்படாதவள் கன்னி. அதுபோன்ற மதில். காவலில் கலையூர் கன்னியை ஒக்கும் (பால- அயோ - 9) இருசுடர் வழங்காப்பெருமூதிலங்கை (ஆசிரிய மாலை) (21) | 4856. | தீயசெய்குநர் தேவரால்; அனையவர்சேரும் வாயில் இல்லதுஓர்வரம்பு அமைக்குவென் என மதியா |
|