பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்831

 

ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர்
                             ஆற்றலே ஆம்;
போவது புலமை’ என்னா, பொருக்கென எழுந்து
                             போனார்.

     இனி வேறு எண்ணல்வேண்டுவது யாவதும் இறையும் இல்லை -
இனிமேல்,வேறு எண்ணிப் பார்க்க வேண்டியது, எதுவும் சிறிதும் இல்லை;
ஆவது சேவகன் தேவிதன்னை கண்டமை விரைவின் செப்பி - இனி நாம்
செய்யத்தக்கது மகாவீரனான இராமபிரானுடைய மனைவியாகிய சீதையைப்
பார்த்ததை விரைவில் சென்று சொல்லி; அவ் அண்ணல் - அந்த
இராமபிரானது,; உள்ளத்து அருந்துயர் ஆற்றலே ஆம் - மனத்தில் உள்ள,
போக்குதற்கு அரிய துன்பத்தைத் தணியச் செய்தலே ஆகும்; போவதே
புலமை என்னா -
(அதற்காக இனி இராமபிரானிடம்) செல்வதே அறிவுள்ள
செயலாகும் என்று அனைவரும் ஒருமித்த கருத்தினராய்க் கூறி; பொருக்
கென எழுந்து போனார் -
விரைவில் எழுந்து சென்றனர்.

     இது, எல்லா வானரவீரரும் ஒரு சேரத் தீர்மானித்துச் சென்ற செயலைக்
கூறுவதாகும். பொருக்கென விரைவுக் குறிப்பு.                       (11)

வானர வீரரின்உரைப்படி, அனுமன்
இராமனிடம்முந்திச் செல்லுதல்.

6018.

‘ஏத நாள்இறந்த; சால வருந்தினது இருந்த சேனை;
ஆதலால்விரைவின் செல்லல் ஆவதுஅன்று; அளியம்
                                    எம்மைச்
சாதல் தீர்த்துஅளித்த வீர ! தலைமகன் மெலிவு தீரப்
போது நீமுன்னர்’ என்றார்; ‘நன்று’ என அனுமன்
                                    போனான்.

     அளியம் எம்மைசாதல் தீர்த்து அளித்த வீர ! - உம்மால் அன்பு
செய்யத்தக்கவராகிய எங்களை இறந்து போதலினின்றும் நீக்கிக் காத்தருளிய
பெரிய வீரனே !; ஏத நாள் - பிராட்டியைத் தேடி வரும் காரணமாய்க்
குறிப்பிட்ட நாட்கள்; இறந்த - கடந்து போயின; இருந்த சேனை சால
வருந்தினது -
உம் வரவை எதிர் நோக்கி இங்கு தங்கியிருந்த சேனை,
மிகவும் துயரம் மேற் கொண்டது; விரைவின் செல்லல் ஆவது அன்று
ஆதலால் -