வேகமாகச் செல்லும்வலிமை உடையது அல்ல ! ஆகையால்; தலைமகன் மெலிவு தீர நீ முன்னர் போது என்றார் - தலைவனான இராமபிரானது துன்பம் நீங்க, நீ முன்னதாக, அப்பெருமானிடம் போவாயாக என்று வானர வீரர் கூறினார்கள்; நன்று என அனுமன் போனான் - ‘நல்லது’ என்று சொல்லிவிட்டு இராமபிரான் இருக்கும் இடம் நோக்கி அனுமன் சென்றான். ஏத நாள் -பிராட்டியைத் தேடி வரும் காரணமாகக் குறிக்கப்பட்ட நாள்; அது ஒரு மாதத் தவணை; ‘ஒரு மதி முற்றுறாத முன் முற்றுதி்ர்’ (கம்ப. 4457) குறிப்பிட்ட நாள் கடந்தமையால், தமது அரசன் சுக்கிரீவன் தண்டிப்பானே என்பது, சேனையின் வருத்தம். சாதல் தீர்த்து அளித்தல் - சேனை சாகத் துணிந்தது. ‘மாண்டுறுவது நலம் என வலித் தனம்’. (கம்ப. 4658) அனுமன், இராமபிரானிடம் விரைவில் செல்ல வேண்டியதைக் காரணத்துடன் வானர வீரர்கள் கூறியதைத் தெரிவிப்பது இது. (12) | 6019. | முத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம் முற்றி, வித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை, அத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்; ஆழியான்மாட்டு இத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம். |
வித்தகத் தூதன்- சதுரப்பாடுடைய தூதனாகிய அனுமன்; முத்தலை எஃகினாற்கும் - மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய சிவபிரானுக்கும்; முடிப்ப அரும் கருமம் முற்றி - செய்து முடிப்பதற்கு அருமையான காரியத்தை நிறைவேற்றி; மீண்டது இறுதியாய் - திரும்பி வந்தது முடிவாக; அத்தலை விளைந்த தன்மை அறிந்த எல்லாம் அறைந்தனம் - அங்கு நிகழ்ந்த செயல்களை தெரிந்த வரையிலும், சொன்னோம்; இத்தலை ஆழியான் மாட்டு நிகழ்ந்த எல்லாம் - இனி, இவ்விடத்தில் (கிட்கிந்தையில்) இராமபிரானிடத்தில் நடந்தனவற்றை எல்லாம்; இயம்புவான் எடுத்துக் கொண்டாம் - சொல்வதற்குத் தொடங்கினோம். இக்கவிதை,கவிக் கூற்று, முத்தலை எஃகினாற்கும் முடிப்பரும் கருமம்:- இலங்கையை எரியூட்டுதல். செயற்கரும் காரியம் |